அமைந்தகரை திராவிட முன்னேற்றக் கழகத் தோழர் மதன்குமார், பெரியார் உலகத்திற்கு 500/- ரூபாயை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் நன்கொடையாக வழங்கினார். திராவிடர் கழக வடசென்னை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன், உதய பிரகாஷ் உடனிருந்தனர் (27.11.2024, சென்னை).
• • •
பட்டுக்கோட்டை வட்டம் கோட்டாக்குடி கா.மாரியப்பன்-மலர்க்கொடி இவர்களின் மகனும் மணியம்மை அவர்களின் துணைவரும், எங்களின் (ம.வ.கவிச்சரண், ம.வ.இசைப்பிரியா) தந்தையுமான பொறியாளர் மா.வசந்தகுமார் 30.11.2024 அன்று அகவை நாள் காணுவதின் மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூபாய் 500 நன்கொடை வழங்கியுள்ளனர். நன்றி! வாழ்த்துக்கள்.