தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டுக்கு ரூ.4,574 கோடி வழங்கப்பட வேண்டும் ஒன்றிய அமைச்சரிடம் அமைச்சர் ராஜேந்திரன் நேரில் கோரிக்கை

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, நவ.29 தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் ஆர்.ராஜேந்திரன் நேற்று (28.11.2024) டில்லியில் ஒன்றிய சுற்றுலா, கலாச்சாரத்துறை அமைச்சர் கஜேந்திரசிங் செகாவத்தை சந்தித்துப் பேசினார்.

தமிழ்நாடு அரசின் சிறப்பு பிரதிநிதி ஏகேஎஸ் விஜயன், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா மற்றும் தமிழ்நாடு அரசின் சுற்றுலாத்துறை செயலர் பி.சந்திரமோகன், சுற்றுலாத்துறை இயக்குநர் ஷில்பா பிரபாகர் சதீஷ் ஆகியோர் உடனிருந்தனர்.

அப்போது அமைச்சர் ராஜேந்திரன், தமிழ்நாட்டின் பல்வேறு சுற்றுலா மேம்பாட்டுப் பணிகளுக்கு ரூ.4,573.53 கோடி வழங்க வேண்டும் என்று ஒன்றிய அமைச்சரிடம் வலியுறுத்தினார். இதுதொடர்பாக ஒன்றிய அமைச்சரிடம் அவர் அளித்த மனுவின் விவரம்:

ஸ்வதேஷ் தர்ஷன் 2.0 திட்டத்தின்கீழ், சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் மாமல்லபுரம் கடற்கரை கோயில் சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்தும் திட்டத்துக்கு ரூ.30 கோடியும், நீலகிரி பைக்காரா இயற்கை சுற்றுலா தல மேம்பாட்டு திட்டத்துக்கு ரூ.28.3 கோடியும் ஒதுக்கீடு செய்ய வேண்டும்.சிறப்பு நிதியுதவி திட்டத்தின்கீழ் மாமல்லபுரத்தில் பாரம்பரிய நந்தவனம் அமைக்கும் திட்டத்துக்கு ரூ.99 கோடியும், உதகை தேவலாவில் சுற்றுலா பூந்தோட்டம் அமைக்கும் திட்டத்துக்கு ரூ.72.58 கோடியும், ராமேசுவரத்தில் சுற்றுலா பயணிகள் மேம்பாட்டு திட்டத்துக்கு ரூ.99 கோடியும் தேவை.

மேலும், பிரசாத் திட்டத்தின்கீழ் 8 நவகிரக கோயில்களில் சுற்றுலா பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்த ரூ.44.95 கோடியும், மராட்டியர்கள், நாயக்கர்கள், பாளையக்காரர்கள் எழுப்பிய பாரம்பரிய கட்டடங்களை பாதுகாக்கவும், புனரமைக்கவும், சீரமைக்கவும் ரூ.3,000 கோடியும், சுற்றுலாத்துறை வளர்ச்சியை மேம்படுத்த ரூ.1,200 கோடியும் (மொத்தம் ரூ.4,573.53 கோடி) வழங்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *