கல்லக்குறிச்சி, நவ. 28- கல்லக்குறிச்சியில் சேலம் நெடுஞ்சாலையில் எஸ்.எம்.டவர் கூட்ட அரங்கில் 24.11.2024 மாலை 6 மணிக்கு திராவிடர் கழக மேனாள் பொருளாளர் வழக்குரைஞர் கோ.சாமிதுரை அவர்களின் 92ஆவது பிறந்த நாள் மற்றும் 11ஆம் ஆண்டு நினைவு நாள் விருது வழங்கும் விழா நடைபெற்றது.
மாவட்ட ப.க இலக்கிய அணி தலைவர் புலவர் பெ.செயராமன் தலைமையில் மாவட்ட கழக செய லாளர் ச.சுந்தரராசன் வரவேற்க, மாவட்ட கழக மகளிரணி தலைவர் பழனியம்மாள் கூத்தன், மாவட்ட ப.க தலைவர் பெ.எழிலரசன்,மாவட்ட ப.க செயலாளர் வீர முருகேசன், மாவட்ட ப.க அமைப்பாளர் சி.முருகன், நகர கழக தலைவர் இரா.முத்துசாமி, நகர கழக செயலாளர் நா.பெரியார்,மாவட்ட ப.க. ஆசிரியரணி தலைவர் கோ.வேல்முருகன், ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினார்கள்.
இவ்விழாவில் விருது வழங்கும் நிகழ்வாக தந்தை பெரியார்,சமூக நீதி காவலர் வீரமணி சமுக நீதி விருதும் சால்வையும் அணிவித்தும் ரூபாய் அய்ந்து ஆயிரம் வழங்கியும் மாவட்ட கழக தலைவர் கோ.சா.பாஸ்கர் அவர்கள் தியாகதுருகம் ஒன்றிய கழக தலைவர் மொ.தண்டபாணி அவர்களுக்கு வழங்கி சிறப்பு செய்தார்.
தந்தைபெரியார்,சாமிதுரை சமூக நீதி விருதும் சால்வையும் அணிவித்தும் ரூபாய் அய்ந்து ஆயிரம் வழங்கியும் விருத்தாசலம் கழக மாவட்ட காப்பாளரும் கழக பேச்சாளர் புலவர் நாத்திக நம்பி, சின்னசேலம் ஒன்றிய கழக தலைவர் கா.அசன் அவர்களுக்கும் வழங்கியும் சிறப்புறையாற்றினார்.
கல்லக்குறிச்சி மாவட்ட கழக காப்பாளர் முனைவர் ம.சுப்பராயன் அவர்களுக்கு பட்டயமும் கருப்புச் சட்டை, வெள்ளை பேண்ட்டும் வழங்கி சிறப்புறை வழங்கினார் மாநில கழக மருத்துவரணி செயலாளர் மருத்துவர் கோ.சா.குமார்.
விருது பெற்றவர்களை பாராட்டி கல்லக்குறிச்சி மாவட்ட கழக ப.க, இலக்கிய மன்றம்,மாவட்டப.கஆசிரியரணி,மருத்துவரணி,இளைஞரணி,ஆசிரிய பெருமக்கள்,ஊர் பெரியவர்கள்,மாணவர்கள் உள்ளிட்ட பலதரப்பட்ட முக்கிய பிரமுகர்களும் மூவரையும் வாழ்த்தியும், சால்வைகள் அணிவித்தும், சந்தன மாலைகள், அணிவித்தும், சால்வைக்கு பதில் புத்தகங்களும், ரூபாயாகவும் வழங்கியும் சிறப்பு செய்தார்கள்.
மாவட்ட கழக துணைத் தலைவர் குழ.செல்வராசு கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்தும், கலந்துகொண்ட அனைவருக்கும் மேனாள் கழக பொருளாளர் கோ.சாமிதுரை அவர்களின் குடும்பத்தின் சார்பில் மாலையில் தேநீரும், பிஸ்கட்டும் இரவு சிற்றுண்டி வழங்கியும் விருது வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது.