தமிழ்நாடு மீனவர்கள் பிரச்சினை குறித்து ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் தி.மு.க. நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி சந்திப்பு

1 Min Read

சென்னை, நவ.28 ஒன்றிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி, தமிழ்நாடு மீனவர்களை மீட்டுத் தரும்படி கோரிக்கை விடுத்தார்.நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நடந்து வருகிறது. இந்நிலையில், ஒன்றிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை, திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி நேற்று (27.11.2024) சந்தித்து மனு அளித்தார்.

அந்த மனுவில், ‘‘கடலோர காவல் படையால் லட்சத்தீவுகள் அருகில் கைது செய்யபப்பட்ட தூத்துக்குடி தருவை குளத்தைச் சேர்ந்த 10 மீன வர்கள், அவர்களின் படகுகளை விடு விக்க வேண்டும்.

குஜராத் போர்ப்பந்தர் அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, கடலில் தவறி விழுந்த தூத்துக்குடி, அயன்பொம்மையாபுரத்தைச் சேர்ந்த மீனவர் அண்ணாதுரையை தேடும் பணியை துரிதப்படுத்தி அவரை கண்டுபிடித்து தரவேண்டும்’’ என தெரிவித்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *