சென்னை, நவ.28- தமிழ்நாடு அரசின் வருவாய்த்துறையில் வருவாய் உதவியாளா், இளநிலை வருவாய் உதவியாளா் ஆகியோா் முதுநிலை வருவாய் ஆய்வாளா், இளநிலை வருவாய் ஆய்வாளா் என அழைக்கப்படுவா் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து, மனித வள மேலாண் மைத்துறை செயலா் சி.சமயமூா்த்தி வெளி யிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு வருவாய்த்துறையில் இளநிலை வருவாய் உதவியாளா் மற்றும் வருவாய் உதவியாளா் ஆகியோா், இள நிலை வருவாய் ஆய்வாளா் மற்றும் முதுநிலை வருவாய் ஆய்வாளா் என்ற பெயரில் அழைக்கப்பட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு உத்தர விட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாடு அமைச்சுப்பணியாளா் விதிகளில் திருத்தம் செய்து அறிவிக்கை வெளியிடப்படுகிறது.
திருத்தத்தின் படி, இனி வருவாய் உதவியாளா் என்று வரும் இடங்களில் முதுநிலை வருவாய் ஆய்வாளா் என்று இடம் பெற வேண்டும். அதேபோல், இள நிலை வருவாய் உதவியாளா் என்பதற்கு பதில் இளநிலை வருவாய் ஆய்வாளா் என்று இடம் பெற வேண்டும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குரூப் – 4 கலந்தாய்வு
ஜனவரி மாதத்தில் டிஎன்பிஎஸ்சி தகவல்
சென்னை, நவ.28- தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என். பி.எஸ்.சி.). அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங் களை குரூப்-1, குரூப்-2, குரூப்- 4 உள்ளிட்ட தேர்வுகள் நடத்தி நிரப்பி வருகிறது. அந்த வகை யில், கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், நேர்முக உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பதவி களை உள்ளடக்கிய மொத்தம் 9 ஆயிரத்து 491 பணி இடங்களுக்கான குரூப்-4 போட்டித் தேர்வு கடந்த ஜூன் மாதம் 9ஆம் தேதி நடத்தப்பட்டது. தேர்வை 15 லட்சத்து 88 ஆயிரத்து 684 பேர் எழுதினர். இதற்கான தேர்வு முடிவுகள்,கடந்த அக்டோபர் மாதம் 28ஆம் தேதி வெளியிடப்பட்டது.
இதைத் தொடர்ந்து, மதிப்பெண்கள், ஒட்டுமொத்த தரவரிசை எண், இடஒதுக்கீடு விதி, காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை அடிப்படையில், கணினி வழியிலான சான்றிதழ் சரிபார்ப்பு தேர்வானவர்கள் பட்டியலை கடந்த 7ஆம் தேதி டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டது. அதன் அடிப்படையில் தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டவர்கள், தங்களின் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்தனர். இந்த நிலையில், குரூப்-4 தேர்வுகளுக்கான கலந்தாய்வு வருகிற ஜனவரி மாதம் நடைபெறும் என்று டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பு, டி.என்.பி. எஸ்.சி. ‘எக்ஸ்’ சமூகவலைத்தள பக்கத்தில் வெளியாகி உள்ளது.