தமிழ்நாடு அரசின் கவனத்திற்கு… மதச்சார்பற்ற திருவள்ளுவர் சித்திரத்தை அழிப்பதா?

1 Min Read

மத நோக்கில் சரசுவதியைத் திணிப்பதா?
அரசுப் பள்ளியில் அடாவடியா?

செய்யாறு வட்டம் உக்கல் சிற்றூரில் உள்ள அரசினர் மேல் நிலைப்பள்ளியில் வரையப் பெற்றிருந்த திருவள்ளுவர் உருவத்தை அழித்து விட்டிருக் கிறார் அந்தப் பள்ளித் தலைமை ஆசிரியர்..

அவர் வணங்கும் கடவுளர் படமான சரசுவதி படத்தைத் திருவள்ளுவர் படத்தை அழித்த இடத்தில் வரைந்து அவரின் மதத்தைப் பரப்புகிற வேலையைக் கல்விக்கூடத்தில் நடத்துகிறார்..

இதைத் தட்டிக் கேட்கச் சென்ற தோழர் தமிழ் முகிலன் மற்றும் தோழர்களின் கருத்து களைச் செவி மடுக்காமல், என்ன செய்து விட முடியும் என்று திமிரோடு மற்றவர்களிடம் அந்தத் தலைமை ஆசிரியர் பேசி இருக்கிறார்..

திருவள்ளுவர் சிலையையோ..
திருவள்ளுவர் படத்தையோ..
திருக்குறளையோ..

இழிவுபடுத்தும் வகையில் நடப்பவர்கள் மீது தமிழ்நாடு அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
மதவெறியையே நோக்கமாகக் கொண்ட அந்தத் தலைமை ஆசிரியரின் மீது தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை எடுப்பதோடு, அந்தத் தலைமை ஆசிரியரின் சொந்த செலவிலேயே மீண்டும் அதே இடத்திலேயே திருவள்ளுவர் படத்தை வரைய வைக்க ஆவன செய்யவேண்டும்..
இப்படியான மதவெறித் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர் களை இனங்கண்டு நடவடிக்கை எடுக்கவும் நெறிப் படுத்தவும் அரசு திட்டமிடவும் வேண்டும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *