பெண்களுக்கு பாதுகாப்பு அளிப்பதில் தமிழ்நாடு முன்னணி மாநிலம்- கீதாஜீவன்

2 Min Read

சென்னை, நவ. 27- பெண்களுக்கு பாதுகாப்பு அளிப்பதில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக விளங்குகிறது என சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித் துள்ளார்.

பெண் உரிமையை காப்பதுபோலவே அவர்களது கண்ணியம், பாதுகாப்பை உறுதிசெய்வதில் திமுக அரசு உறுதியாக உள்ளது. பெண்கள் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் தங்கள் பணிகளை மேற்கொள்ளும் சூழல் தமிழ்நாட்டில் நிலவுகிறது என்று கூறியுள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் கீதா ஜீவன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்ததாவது; பெண்களுக்கான உரிமைகளைக் காப்பது போலவே அவர்களது கண்ணியத்தையும் பாதுகாப் பையும் உறுதி செய்வதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு உறுதியாக இருக்கிறது. பெண்கள் சுதந்திர மாகவும், பாதுகாப்பாகவும் தங்களுடைய பணிகளை மேற்கொள்வதற்கான சூழல் தமிழ்நாட்டில் நிலவுவதால்தான் தமிழ்நாட்டில் பெண்கள் மிக அதிக அளவில் கல்வி கற்கிறவர்களாகவும், வேலைக்குச் செல்பவர்களாகவும், சுயமானவர் களாகவும் உள்ளனர்.

இந்தியாவில் உற்பத்தித் துறையில் உள்ள பெண்களில் கிட்டத்தட்ட பாதிப்பேர் – அதாவது 43% பேர் தமிழ் நாட்டில் பணியாற்று கிறார்கள். முத்தமிழறிஞர் கலைஞர் 1973ஆம் ஆண்டுப் பெண்களை முதன் முதலாகக் காவல்துறையில் இணைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப் பேற்றவுடன் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய் வதற்காக அனைத்து உட்கோட்டங்களிலும் ஓர் அனைத்து மகளிர் காவல் நிலையம் என்ற வகையில் புதிதாகக் காவல் நிலையங் களைத் திறந்து வருகிறார்.
தமிழ்நாட்டில் மொத்தம் 241 அனைத்து மகளிர் காவல் நிலையங்கள், 32 ஆட்கடத்தல் தடுப்புப் பிரிவுகள், 7 புலன் விசாரணைப் பிரிவுகள், 43 குழந்தை கடத்தல் தடுப்புப் பிரிவுகள் மற்றும் 39 சிறப்பு இளஞ்சிறார் காவல் பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன.

தேசிய குற்ற ஆவணக் காப்பகம் இறுதியாக 2022ஆம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையின்படி பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்ற வழக்குகளின் எண்ணிக்கை நாடு முழுமைக்கும் இலட்சத்துக்கு 65 என்றால் தமிழ் நாட்டில் 24 என்ற அளவில் கட்டுப் படுத்தப்பட்டுள்ளது.
பாலியல் வன்புணர்வு வழக்குகளின் தேசிய சராசரி 4.6 என்ற அளவிலும் தமிழ்நாட்டில் 0.7 அளவிலும் உள்ளது.

பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான எத்தகைய வன்முறையையும் இந்த அரசு சகித்துக் கொள்ளாது. மிகுந்த கண்காணிப்புடன் உறுதி யான நடவடிக்கைகளை எப்போதும் எடுத்து வருகிறது. அதனால் தான் இந்தியாவிலேயே பெண் களுக்குப் பாதுகாப்பு இருக்கும் மாநிலங்களில் தமிழ்நாடு முன்னிலையில் இருக்கிறது.

இவ்வாறு அமைச்சர் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *