திருச்சி பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 11ஆம் வகுப்பு மாணவிகளுக்கு அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டத்தின்கீழ் நடைபெற்ற விழாவில் திருச்சி மாநகராட்சியின் 60ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் காஜாமலை விஜய், பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் செயலர் வீ.அன்புராஜ், பெரியார் தொடக்கப்பள்ளி செயலாளர் ஆரோக்கியராஜ் ஆகியோர் கலந்துகொண்டு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினர். பள்ளியில் பயிலும் பல்வேறு செயல்பாடுகளில் உள்ள மாணவியர்கள் மிகுந்த கரவொலியுடன் சிறப்பு விருந்தினர்களை வரவேற்றனர். இந்நிகழ்விற்கு வருகை புரிந்த சிறப்பு விருந்தினருக்கு பள்ளி செயலர் வீ.அன்புராஜ் அவர்கள் பொன்னாடை அணிவித்து சிறப்பு செய்து, மிதிவண்டிகளை பெற்ற மாணவியர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து, அரசுத் பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண் பெறவேண்டும் என அறிவுரை வழங்கினார். (திருச்சி, 25.11.2024)
திருச்சி பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா
1 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
TAGGED:வீ.அன்புராஜ்
Leave a Comment
Popular Posts
10% Discount on all books