நடக்க இருப்பவை

2 Min Read

24.11.2024 ஞாயிற்றுக்கிழமை
வேலூர் மாவட்டம்கழக மகளிரணி திராவிட மகளிர்பாசறை கலந்துரையாடல் கூட்டம்
குடியேற்றம்: மாலை 5.30 மணி

இடம்: பெரியார் அரங்கம், புவனேசுவரிப் பேட்டை, குடியேற்றம்

தலைமை: ந.தேன்மொழி (மாவட்ட மகளிரணி தலைவர்)

வரவேற்புரை: ச.ரம்யா (மாவட்ட மகளிர் பாசறை தலைவர்)

இணைப்புரை: இரா.இராஜகுமாரி (நகர மகளிர் பாசறை தலைவர்)

முன்னிலை: தா.நாகம்மாள் (பொதுக்குழு உறுப்பினர்), சு.வசுமதி (மாவட்ட மகளிர் பாசறை செயலாளர்)

தொடக்கவுரை: ச.ஈஸ்வரி (மாவட்ட காப்பாளர்)

நோக்கவுரை: ச.கலைமணி (மாவட்ட காப்பாளர்)

வழிகாட்டுதல் உரை: தகடூர் தமிழ்ச்செல்வி (மாநில மகளிரணி செயலாளர், திராவிடர் கழகம்)

நோக்கங்கள்: தமிழர் தலைவர் பிறந்த நாளை மகளிர் அணி, மகளிர் பாசறை சார்பாக சிறப்பாக கொண்டாடுவது, தமிழர் தலைவர் அவர்களின் வழிகாட்டுதல் படி தொடர்ந்து, இல்லம் தேடி மகளிர் சந்திப்பு நடத்துவது, நகரம் – ஒன்றியத்தின் முக்கிய இடங்களில் தமிழர் தலைவர் அவர்களின் அறிவிப்பினையொட்டி வைக்கம் நூற்றாண்டு விழா – கலைஞர் நூற்றாண்டு விழா – தெருமுனை கூட்டம் நடத்துவது, மகளிர் அணி – மகளிர் பாசறை பொறுப்பாளர்களுக்கு தமிழர் தலைவரால் அறிவிக்கப்பட்டுள்ள பெரியார் பிஞ்சு மற்றும் விடுதலை இதழ் சந்தா சேர்ப்பு பணியை மேற்கொள்வது, கிளை – ஒன்றிய அளவில் மகளிர் பொறுப்பாளர்களை நியமிப்பது

விழைவு: திராவிடர் கழக மகளிரணி, திராவிட மகளிர் பாசறை, திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகம் தோழர்கள் பங்கேற்கவும்

நன்றியுரை: சி.லதா (மாவட்ட மகளிரணி செயலாளர்

ஏற்பாடு: மகளிரணி, மகளிர் பாசறை, வேலூர் மாவட்டம்.

26.11.2024 செவ்வாய்க்கிழமை
புலவர் பா.வீரமணி எழுதிய “வடசென்னை கண்ட சான்றோர்கள்” எனும் நூல் அறிமுக விழா
சென்னை: மாலை 6 மணி

இடம்: ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்ற அரங்கம், 24/223, என்.எஸ்.சி. போசு சாலை, சென்னை

தலைமை: தி.லோகநாதன் (தலைவர், சிங்காரவேலர் கல்வி அறக்கட்டளை)

பேசுநர்: துணைவர் ரங்கையா முரகன், முனைவர் அ.பகத்சிங், முனைவர் அவ்வை அருள் (தலைவர்), முனைவர் ப.தாமரைக்கண்ணன் (செயலாளர்), புலவர் பு.சீ.கிருட்டிணமூர்த்தி (இணைச் செயலாளர்).

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *