தாம்பரம் மாவட்ட கழக கலந்துரையாடல்: சுயமரியாதை நாளில் பெரியார் உலக நிதியை ஒருங்கிணைந்து வழங்குவதென முடிவு

Viduthalai
1 Min Read

தாம்பரம், நவ. 24- தாம்பரம் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் 17.11.2024 அன்று மாலை 7 மணியளவில் தாம்பரம் பெரியார் புத்தக நிலையத்தில் மாவட்டத் தலைவர் ப.முத்தையன் தலைமையில், மாவட்டச் செயலாளர் கோ.நாத்திகன் வரவேற்றார்.

கழகத் துணைப் பொதுச்செயலாளர் வழக்குரைஞர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் சிறப்புரையில் கீழ்க்கண்ட விழாக்களான தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 92ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா, நவம்பர் 26ஆம் தேதி ஈரோடு மாநாடு மற்றும் திருச்சி சிறுகனூர் பெரியார் உலக வளர்ச்சி நிதி சேகரிப்பு செய்வது குறித்து எடுத்துரைத்தார்.

மேற்கண்ட விழாக்களுக்கும், பெரியார் உலக நன்கொடைக்கும் நாம் ஒருங்கிணைந்து பணி முடிப்போம் என்று கழகத் தோழர்கள் கருத்துத் தெரிவித்தனர்.

தாம்பரம் மாவட்டக் கழகம் சார்பில் நவ.26இல் ஈரோடு மாநாடு, திருச்சியில் டிச.28,29இல் நடைபெறும் இந்திய பகுத்தறிவாளர் கூட்டமைப்பு (FIRA) மாநாட்டில் பங்கேற்பது, டிசம்பர் 2ஆம் தேதி அன்று தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 92ஆவது பிறந்தநாள் சுயமரியாதை நாள் விழாவில் பெரியார் உலக நிதி, விடுதலை சந்தா வழங்குவது குறித்து கலந்துரையாடலில் முடிவு செய்யப்பட்டது.

கூட்டத்தில் இறைவி,கே.மீனாம்பாள், மு.நாகவள்ளி, இரா.சு.உத்ரா, மண்ணிவாக்கம் அருணா பத்மாசூரன், அ.ப.நிர்மலா, அனகை கு.ஆறுமுகம், தி.இர.சிவசாமி, சீர்காழி கு.நா.இராமண்ணா, ரெ.மகாலிங்கம், மா.இராசு, கரைமாநகர் தே.சுரேஷ், பூவை.க.தமிழ்ச்செல்வன், மா.குணசேரகன், ஆர்.உத்திரகுமாரன், கரசங்கால் ரெ.கதிர்வேல், குன்றத்தூர் மு.திருமலை, தி.திலீபன், கோ.பழனிசாமி, சந்திரசேகர், தனசேகர், ஆர்.வீரமணி மற்றும் போழி.மாறன் உள்ளிட்ட தாம்பரம் மாவட்டத் திராவிடர் கழகத் தோழர்கள் பெருந் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இறுதியில் தாம்பரம் நகர கழக செயலாளர் மோகன்ராஜ் நன்றி கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *