சென்னை, நவ.24– சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உள்நோயா ளிகளாக சிகிச்சை பெறு கின்றனர். தினமும் 12 ஆயிரத்துக்கும் அதிக மானோர் புறநோயாளி களாக சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சிறந்த முறையில் உயர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதால், மருத்துவமனையின் மருத்துவ கட்டமைப்பு களை பல்வேறு மாநி லங்களில் இருந்து மருத்துவ குழுக்கள் வந்து பார்வையிட்டு, அவர்களின் மாநிலங்களில் செயல்படுத்தி வருகின்ற னர்.
இந்நிலையில், உத்தரா கண்ட் மாநில சுகாதாரத் துறை அமைச்சர் தன்சிங் ராவத் நேற்று ராஜீவ் காந்தி அரசு பொது மருத் துவமனைக்கு வருகை தந்தார். அவசர சிகிச்சை பிரிவு, தீவிர சிகிச்சை பிரிவு, முழு உடல் பரிசோதனை மையம், நோயாளிகளுக்கு சமைத்து வழங்கப்படும் உணவு கூடங்கள் உள் ளிட்ட இடங்களை பார்வையிட்டார். பின்னர், நோயாளிகளின் உறவினர்களுக்கு வழங்கப் படும் அடையாள அட்டை குறித்து மருத்துவர்களிடம் கேட் டறிந்தார். இதையடுத்து சென்னை மருத்துவ கல்லூரிக்கு சென்று, வகுப்பறைகளை பார்வை யிட்டார்.
பின்னர், மருத் துவமனை டீன் தேரணி ராஜனிடம் தன் கைப்பட எழுதிய வாழ்த்து கடிதம் ஒன்றை வழங்கினார். அதில், ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவ மனை மற்றும் சென்னை மருத்துவக் கல்லூரி ஆகியவை மிகவும் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் உள்ளது. இந்தியாவிலேயே மிகவும் பழமையான சென்னை மருத்துவ கல்லூரியை பார்வையிட்டதில் மகிழ்ச்சி அடைகிறேன்’ என கூறப்பட்டிருந்தது.