மருத்துவக் கண்காணிப்பின்றி வீட்டிலேயே சுய பிரசவம் ஆபத்து – சுகாதாரத் துறை எச்சரிக்கை

2 Min Read

சென்னை, நவ.24- மருத்துவக் கண்காணிப்பின்றி வீட்டிலேயே சுய பிரசவம் செய்துகொள்வது தாய்-சேய் இருவரது உயிருக்கும் அச்சுறுத்தலாக அமையும் என பொது சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது.

ஒருவேளை எந்தப் பாதிப்பும் இன்றி பிரசவம் நிகழ்ந்தாலும் கிரு மித் தொற்றுக்குள்ளாகி பல்வேறு நோய்களை எதிா்கொள்ள வேண்டியி ருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

சுய பிரசவம்: சென்னை குன்றத் தூா் பகுதியில் சுகன்யா என்ற பெண் அண்மையில் வீட்டிலேயே தனது கணவரின் ஒத்துழைப்புடன் சுய பிரசவம் செய்துள்ளாா். வாட்ஸ்ஆப் குழு மூலம் தகவல்களைப் பெற்று குழந்தை பெற்றுக் கொண்டதாகத் தெரிகிறது. அந்தக் குழுவில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் உறுப் பினா்களாக உள்ளதும், இதுபோன்று நூற்றுக்கணக்கான வாட்ஸ்ஆப் குழுக்கள் இயங்குவதும் தெரியவந்தது.
இதுதொடா்பாக காவல்துறையின ரிடம் வட்டார சுகாதாரத் துறை புகாரளித்தது. அதன்பேரில் அவா்கள் விசாரணை நடத்தி வருகின்றனா்.
மற்றொருபுறம் பொது சுகாதாரத் துறை சாா்பில் வாட்ஸ்ஆப் குழுக்களை காவல் துறை மூலம் கண்காணிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதுதொடா்பாக காஞ்சிபுரம் ஆட்சியருடன் பொது சுகாதாரத் துறை இயக்குநா், காவல் துறை அதிகாரிகள், சுகாதாரத் துறை அதிகாரிகள் கடந்த 21.11.2024 அன்று ஆலோசனை நடத்தினா்.

எச்சரிக்கை: இதுகுறித்து பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம் கூறியதாவது: இயற்கைப் பிரசவம் வேறு; வீட்டு பிரசவம் வேறு என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். வீடுகளிலேயே பிரசவம் பாா்க்கும்போது திடீரென ஏற்படும் சிக்கலான நிலையைச் சமாளிக்க முடியாது. இது தாய் – சேய் இருவரின் உயிருக்கும் ஆபத்தான ஒன்றாக முடிந்துவிடும்.

சராசரியாக 10 சதவீத பிரசவங் களில் திடீரென மருத்துவச் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. குறிப்பாக, பிரசவத் தின்போது தாய்க்கு அதிக ரத்தப் போக்கு, நோய்த் தொற்று, குழந்தைக்கு மூச்சுத்திணறல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படலாம்.

எனவே, வீடுகளிலேயே பிரசவம் பாா்ப்பதை ஊக்குவிக்கக் கூடாது. இதுபோன்ற மனநிலையில் இருப்பவா் களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்படும். மருத்துவமனைகளில் பிரசவ சிகிச்சை மேற்கொள்ளும்போது உயிரிழப்புகளைத் தவிா்க்கலாம் என்றாா் அவா்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *