சுயமரியாதை நாள் விழாவில் ‘விடுதலை’ சந்தா, பெரியார் உலகத்திற்கு பெரும் அளவில் நிதி வழங்குவது என சிவகங்கை மாவட்ட இளைஞரணி கலந்துரையாடலில் தீர்மானம்

2 Min Read

சிவகங்கை, நவ.24- சிவகங்கை மாவட்ட இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம் 23.11.2024 அன்று காலை 10 மணி அளவில் மாவட்ட கழகத் தலைவர் புகழேந்தியின் யாழகம் இல்லத்தில் நடைபெற்றது.

கலந்துரையாடல் கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் இரா.புகழேந்தி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் பெரு.இராசாராம் வரவேற்புரை ஆற்றினார். பெரியார் பெருந்தொண்டர் வேம்பத்துர் க. வீ.செயராமன், இளையான்குடி ஒன்றிய செயலாளர் சாலைகிரா மம் பழனி வட்டன், சாலைகிராமம் தா.பாக்யராஜ், சிவகங்கை மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் சு.இராசாங்கம் ஆகியோர் உரையாற்றினர்.
கழக இளைஞரணி மாநில செய லாளர் நாத்திக பொன்முடி கழக கொள்கைகள் பற்றியும், தந்தை பெரியார், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களைப் பற்றியும் சிறப்புரை ஆற்றினார். பின்னர் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, இறுதியில் சிவ கங்கை மாவட்ட அமைப்பாளர்
ச. அனந்தவேல் நன்றியுரை ஆற்றினார்.

கூட்டத்தில், வைக்கம் வீரர் எனப் புகழ் பெற்ற தந்தை பெரியாருக்கு கேரள மாநிலம் வைக்கத்தில் இரு மாநில அரசுகளும் இணைந்து 12.12.2024 அன்று விழா எடுக்க உள்ளது. இப் பெருமைமிகு விழாவிற்கு, சிவகங்கை மாவட்டக் கழக சார்பாக தனி ஊர்தியில் செல்வதெனவும்,
2.12.2024 திராவிடர் கழக தலைவர், தந்தை பெரியாரின் கொள்கை வீச்சு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 92 ஆவது பிறந்த நாள் மகிழ்வாக விடுதலை சந்தா, பெரியார் உலகத்திற்கு பெரும் அளவில் நிதி வழங்குவது எனவும்,
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்க ளின் 92 ஆவது பிறந்த நாள் மகிழ்வாக மாவட்டம் முழுவதும் சுவரொட்டி, விளம்பர பதாகைகள் வைப்பது எனவும்,
கழக இளைஞரணி சார்பாக மாவட்டம் முழுவதும் கழக இலட்சியக் கொடிகள் ஏற்றவும், புதிய கிளைக் கழகங்கள் அமைத்தல், தகவல் பதாகை அமைத்து, தினம் ஒரு தகவல் எழுதுதல், திண்ணைப் பிரச்சாரங்கள், தெருமுனைப் பிரச்சாரம் போன்ற நிகழ்ச்சிகளை தொடர்ச்சியாக நடத்துவது எனவும்,
டிசம்பர் 28, 29 ஆகிய இரு நாள்கள் , திருச்சியில் நடைபெறும் இந்திய பகுத்தறிவாளர் சங்கங்களின் கூட்டமைப்பின் 13 ஆவது மாநாட்டில் சிவகங்கை மாவட்டம் சார்பில் அனைத்து தோழர்களும் கலந்து கொள்வதெனவும்,
மாவட்டத்தில் எழுச்சியுடன் களமாடி அதிக அளவில் இளை ஞர்களை இயக்கத்திற்கு அழைத்து வருவது எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *