மதுரையில் வள்ளலார் விழா

Viduthalai
1 Min Read

மதுரை, நவ. 23- வள்ளலாரின் பார்வையில் மானுட நேயம் எனும் தலைப்பில் நவம்பர் 16 மாலை 6 மணிக்கு மதுரை பெரியார் மய் யத்தில் பெரியார் வீரமணி அரங்கில் மதுரை சிந்தனை மேடை சிறப்புக் கூட்டம் நடைபெற்றது.
தலைமைக்கழக அமைப்பாளர் வே.செல்வம் கூட்டத்திற்கான ஏற்பாடுகளைச் செய்ததோடு கூட்டத்தினையும் ஒருங்கிணைத்து உரையாற்றினார் கூட்டத்திற்கு பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் சி.மகேந்திரன் தலைமையுரையாற்றினார்.

வருகைதந்த அனைவரையும் வரவேற்று மனநல ஆலோசகரும் மதுரை சிந்தனை மேடை தலைவருமான ஜெ.வெண்ணிலா உரையாற்றினார்.
தொடக்கவுரையாக பகுத்தறிவு எழுத்தாளர் மாநில செயலாளர் கவிஞர் சுப.முருகானந்தம் உரை் யாற்றினார், கூட்டத்திற்கு வருகை தந்து சிறப்பித்த அருட்பெருஞ்ஜோதி முதியோர் காப்பக நிறுவனர் மு.பெருமாள் அவர்களுக்கு மாவட்டத்தலைவர் அ.முருகானந்தம் பயனாடை அணிவித்து புத்தகங்கள் வழங்கி பாராட்டினார்.

சிறப்புரையாற்ற வருகைதந்த வள்ளலார் இயற்கை அறிவியல் மய்ய நிறுவனர் ஆதிரை சசாங்கன் அவர்களுக்கு சால்வை அணிவித்து புத்தகம் வழங்கி அவரை அறிமுகம் செய்து மாநில வழக்குரைஞரணி துணைச் செயலாளர் வழக்கறிஞர் நா.கணேசன் உரையாற்றினார்.
கழகத் தோழர் அ.வேல்முருகன் உரைக்குப்பிறகு வள்ளலார் இயற்கை அறிவியல் மய்ய நிறுவனர் ஆதிரை சசாங்கன் உரையாற்றினார். மதுரை மாவட்ட துணைச்செயலாளர் தனுஷ்கோடி நன்றி கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *