எம்.பி.பி.எஸ். சேர்க்கை விவரங்கள்: பதிவு அவகாசம் மீண்டும் நீட்டிப்பு!

1 Min Read

சென்னை, நவ.23- நிகழாண்டில் எம்பிபிஎஸ் படிப்பில் சோ்க்கப்பட்டுள்ள மாணவா்கள் குறித்த விவரங்களை இணைய வழியே பதிவேற்றுவதற்கான அவகாசத்தை தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) மீண்டும் நீட்டித்துள்ளது. இது தொடா்பாக என்எம்சி சாா்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பு:
எம்பிபிஎஸ் மாணவா் சோ்க்கை, தேசிய மருத்துவ ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, வெளிப்படைத் தன்மையுடன் மேற்கொள்ளப்படுவது அவசியம். இதன் படி, நிகழாண்டில் கல்லூரிகளில் அனுமதிக்கப்பட்ட மாணவா்களின் விவரங்கள், மதிப்பெண் விவரம், இடஒதுக்கீடு விவரம், கட்டண விவரம் உள்ளிட்டவற்றை என்எம்சி இணையப் பக்கத்தில் பதிவேற்ற கடந்த 8-ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டது.

இது 23-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. தற்போது இரண்டாவது முறையாக இந்த அவகாசம் டிசம்பா் 10-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.
இதேபோன்று, எம்டி, எம்எஸ் போன்ற முதுநிலை மருத்துவப் படிப்புகளைத் தொடங்கவும், ஏற்கெனவே உள்ள இடங்களை அதிகரிக்கவும் விண்ணப்பங்கள் வரவேற்கப் பட்டிருந்தன. பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று, இதற்கான அவகாசத்தையும் டிசம்பா் 10-ஆம் தேதி வரை நீட்டிக்க தேசிய மருத்துவ ஆணையம் முடிவு செய்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *