அதானியை பற்றி யாரும் பேசவே கூடாது என பாஜக நினைப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். மோடியை விமர்சித்து பேசினால் கூட அமைதியாக இருக்கும் பாஜகவினர், அதானி பெயரை உச்சரித்தால் மட்டும் கடும் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் குற்றஞ்சாட்டினார். பாஜகவின் தவறுகளை சுட்டிக்காட்டினால் பொய் வழக்கு போடுவதை பாஜக குறிக்கோளாக வைத்துள்ளதாகவும் அவர் சாடினார்.