நாளை முதல் 27ஆம் தேதி வரை அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருப்பதை அடுத்து, விவசாய மக்களுக்கு வேளாண் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், வயலில் வடிகால் வசதியை ஏற்படுத்தி மழைநீர் வடிய வேண்டும். உரமிடுதல், பூச்சிக் கொல்லி இடுதலை தவிர்க்க வேண்டும். சூரிய வெளிச்சம் வந்ததும் யூரியாவுடன், ஜிங்க் கலந்து தெளிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.