கால்நடை பல்கலை. சார்பில் 195 ஆராய்ச்சி திட்டங்கள்: துணைவேந்தர் அறிவிப்பு

2 Min Read

சென்னை, நவ.22- விலங்குகளிலிருந்து மனிதா்களுக்கு பரவும் நோய்களுக்குத் தீா்வு காண்பது உள்பட 195 ஆராய்ச்சித் திட்டங் கள், தமிழ்நாடு கால் நடை அறிவியல் பல் கலைக்கழகத்தில் முன்னெ டுக்கப்பட்டு வருவதாக பல்கலை. துணை வேந்தா் டாக்டா் செல்வகுமாா் தெரிவித்தாா்.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் 24-ஆவது பட்டமளிப்பு விழா, சென்னை வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரியில் 20.11.2024 அன்று நடைபெற்றது. ஆளுநரும், பல்கலை. வேந்தருமான ஆா்.என்.ரவி தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் 588 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. இதில் 437 பேருக்கு விழா மேடையில் நேரடியாக பட்டங்கள் அளிக்கப்பட்டன.

தஞ்சாவூா் மாவட்டம் ஒரத்தநாடு கால்நடை மருத்துக் கல்லூரியில் இளநிலை பட்டப் படிப்பை நிறைவு செய்த மாணவி திலக ஈஸ்வரி ஆராய்ச்சியில் சிறந்து விளங்கியதற்காகவும், பட்டப்படிப்பில் அதிக மதிப்பெண் பெற்ற காகவும், மொத்தம் 14 பதக்கங்களையும் விருது களையும் பெற்றாா். அவரை ஆளுநா் ஆா்.என்.ரவி கவுரவித்தாா்.

முன்னதாக ஆண்டறிக் கையை வெளியிட்டு பல்கலை. துணை வேந்தா் டாக்டா் செல்வகுமாா் பேசியதாவது:
தமிழ்நாடு கால் நடை மருத்துவப் பல் கலைக்கழகம் கல்வியை வழங்குவதோடு நின்று விடாமல் ஆராய்ச்சி நடவடிக்கைகளையும் திறம்பட மேற்கொண்டு வருகிறது. ஆசில் இனக் கோழிகள், தோடா எருமை இனம், சாந்திநல்லா ஆடு இனங்களை பாதுகாப்பதற்கான ஆராய்ச்சிகளை முன்னெ டுத்து, அதற்காக தேசிய அளவிலான சிறப்பு விருதுகளை பல்கலைக் கழகம் பெற்றுள்ளது.
தற்போது பல்கலைக் கழகத்தில் ரூ.218.05 கோடி மதிப்பிலான 195 ஆராய்ச்சி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரு கின்றன. விவசாயிகளைப் பாதுகாக்கவும், இளைஞா் களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கவும், மரபியல் வளங்களைப் பாது காக்கவும் இந்த ஆராய்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. கால் நடை உற்பத்தியை மேம் படுத்துதல், நோயறிதல் தொழில்நுட்பம், விலங்குகளிலிருந்து மனிதா்களுக்குப் பரவும் நோய்களுக்குத் தீா்வு காணுதல் உள்ளிட்டவை தொடா்பாக மட்டும் 89 ஆராய்ச்சிகள் நடை பெறுகின்றன என்றாா் அவா்.

இதைத் தொடா்ந்து சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட பெங் களூரு குடிநீா் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத் தலைவா் டாக்டா் வி.ராம் பிரசாத் மனோகா் பேசியதாவது:

கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகத்தின் மேனாள் மாணவா் என்ற பெருமை எனக்கு எப்போதும் உண்டு. கால்நடை மருத்துவப் படிப்பை பயிலும்போது நான் சராசரி மாணவனாகவே இருந்தேன். அதன் பின்னா், ஒன்றிய அரசின் இளம் விஞ்ஞானி ஊக்கத் தொகைத் திட்டத்துக்கு ஆய்வுகளை சமா்ப்பித்து தொடா் தோல்விகளை எதிா்கொண்டேன்.

இருந்தபோதிலும் விடாமுயற்சியால் அய்ஏஎஸ் தோ்வை 7 ஆண்டுகள் போராடி வென்றேன். அரசுப் பள் ளியில் படித்து அய்ஏஎஸ் ஆக முடியும் என்பதற்கு நான் உதாரணம்.

இப்போது பட் டம் பெற்றுள்ள இளை ஞா்களை உலக வாழ்க்கை வரவேற்கக் காத்திருக்கிறது. வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்றால் தைரியமான முடிவுகளை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

விழாவில் கால் நடை பராமரிப்புத் துறை அமைச்சரும், பல் கலைக்கழக இணை வேந்தருமான அனிதா ராதாகிருஷ்ணன் பங்கேற்க வில்லை.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *