நிருப நேயர்களுக்கு விண்ணப்பம்

viduthalai
1 Min Read

“குடிஅரசு” பத்திரிகை மிகவும் குறைந்த அளவுள்ளது. அதில் 10 பக்கங்கள் விடயங்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்தாலும் பல வர்த்தமானங்களும் நிருபங்களும் வந்து குவிந்து பத்திரிகை ஏற்படுத்தி யதின் கருத்தை நிறைவேற்ற முடியாமல் கஷ்டப் படுத்துகிறது. நிருபர்களும் வர்த்தமானம் தெரிவிப்ப வர்களும் நமது பத்திரிகையைத் தினசரி என்று கருதிக் கொண்டிருக்கிறார்கள் என்றே நினைக்க வேண்டி யிருக்கிறது. ஆதலால் நாம் உடனுக்குடன் பிரசுரிக்க வில்லை என்று நிரூப நேயர்கள் நம்மீது வருத்தப் படாமல் இருக்கும்படி வேண்டுகிறோம். பல தேச வர்த்தமானங்களை நாம் பிரசுரிப்பதில்லையென்று கூட நம்மீது பல சந்தாதாரர்களுக்குச் சலிப்பிருப்பதாய்த் தெரிகிறது. அவர்களும் நமது கருத்தையும் நிலையையும் அறிந்து மன்னிப்பார்கள் என்றே நம்புகிறோம். நமது பத்திரிகை வர்த்தமான பத்திரிகை அல்லவென்றும், பிரச்சார பத்திரிகை என்றும் மறுபடியும் தெரிவித்துக் கொள்ளுகிறோம். ஆதலால் நிருபங்களாலும் வர்த்தமானங்களாலும் நமது பத்திரிகையின் உத்தேசத்தைக் கெடுக்காமலும் வர்த்தமானம் இல்லையே! என்று கருதி அலட்சியம் செய்யாமலும் இருக்கும்படி பிரார்த்திக்கிறோம்.

(பத்திராதிபர்)
– :குடிஅரசு – ஆசிரியர் குறிப்பு – 23.05.1926

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *