தந்தை பெரியார் பொன்மொழி

1 Min Read

சுயமரியாதை இயக்கத்திற்கு அரசியல் பிரதானமல்ல. ஆனால், சுயமரியாதை இயக்கத்தின் கொள்கை நலத்துக்கும், திட்டங்களின் வெற்றிக்கும் கேடு செய்யவே காங்கிரஸ் மூலம் பார்ப்பனர்கள் தேசியப் போர்வையைப் போட்டுக் கொண்டு சூழ்ச்சி செய்கிறார்கள் என்று நாங்கள் கருதுகிறவரை அக்காங்கிரசை ஒழிக்கும் அளவுக்குச் சுயமரியாதை இயக்கம் அரசியலைப்பற்றிப் பேசவும், அரசியலைப் பிரதானமாய்க் கொண்ட ஜஸ்டிஸ் கட்சிக்கு ஆதரவளிக்கவும் கடமைப்பட்டிருக்கிறது. ஆதலால்தான், இன்று நாங்கள் ஜஸ்டிஸ் கட்சித்தலைவர்கள் கவலையற்றோ, தைரியமற்றோ, எதிரிக்கு ஆளாகியோ, அயர்ந்துபோயோ, கட்சிக்குத் துரோகம் செய்துகொண்டோ இருக்கிறார்கள் என்றாலும் நாங்கள் அது வெகு சீக்கிரத்தில் தனது உச்சஸ்தான நிலைக்கு வரப்போகிறது என்பதில் உறுதியான நம்பிக்கை கொண்டே உழைத்துக் கொண்டிருக்கிறோம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *