சென்னை கொரட்டூரில் நடைபெற்ற சிறப்பு கருத்தரங்கம்
கொரட்டூர், நவ. 22– ‘பெண்கள் மாநாட்டில் பெரியார்’ சிறப்பு கருத்தரங்க நிகழ்வு பெரியார் அண்ணா கலைஞர் பகுத்தறிவு பாசறையின் சார்பில் 447ஆவது வார நிகழ்வாக 16-11-2024 அன்று மாலை 7 மணி அளவில் சென்னை கொரட்டூர் தொடர் வண்டி நிலைய சாலையில் உள்ள தி.மு.க. கிளைக் கழக அலுவலகத்தில் பாசறை ஒருங்கிணைப்பாளர் இரா.கோபால் வரவேற்புரையுடன் சி.அறிவுமதி (திராவிட மாணவர் கழகம்) முன்னிலையில் சி.ஜெயந்தி (ஆவடி மாவட்ட திராவிடர் கழக மகளிர் அணி) தலைமையில் 1938 ஆம் ஆண்டு சென்னை மகளிர் மாநாட்டில் வழங்கப்பட்ட பெரியார் பட்டம் படத்தினை புஷ்பா பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்.
ஆவடி மாவட்ட திராவிடர் கழக செயலாளர் க.இளவரசன்,சு.தேவேந்திரகுமார், வழக்குரைஞர் பன்னீர்செல்வம் ஆகியோர் உரை யாற்றினர்.ஆறுமுகம், அரவிந்தன், கருப்பசாமி, பிச்சை மணி, சுமதி மணி, அபுதாகீர், அருள் விழியன், ஹரிதாஸ், எ.கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.இறுதியாக அன்புமணி நன்றி கூறினார்.