இராணிப்பேட்டை மாவட்ட கழக கலந்துறவாடலில் முடிவு!
இராணிப்பேட்டை, நவ.22 இராணிப்பேட்டை மாவட்ட திராவிடர் கழக கலந்துறவாடல் கூட்டம் 16.11.2024 அன்று மாலை 6 மணிக்கு வாலாஜாப்பேட்டை இராமு சரக்குந்து அலுவலகத்தில் உற்சாகமாக நடைபெற்றது.
மாவட்டக்கழகதுணைத் தலைவர் பொன்.வெங்கடேசன் வரவேற்புரையாற்றினார். மாவட்டத்தலைவர் சு.லோக நாதன் தலைமையேற்று ஆக்கவு ரையாற்றினார்.
மாநில கழக ஒருங்கி ணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் நவம்பர் 26 இல் ஈரோட்டில்நடைபெறவுள்ள சுயமரியாதை இயக்க நூற்றாண்டு, ‘குடிஅரசு’ நூற்றாண்டு விழா வில் பங்கேற்க வேண்டிய அவசி யத்தையும், டிசம்பர்-2 இல் சென்னையில் நடைபெறும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்க ளின் 92 ஆவது பிறந்தநாள் விழாவில் குடும்பத்துடன் பங்கேற்று பெரியார் உலகத்திற்கு நிதியளித்து வாழ்த்த வேண்டிய அவசியத்தையும் விளக்கி தொடக்கவுரையாற்றினார்.
தலைமைக்கழக அமைப்பாளர் பு.எல்லப்பன், மாவட்டச் செயலாளர் செ.கோபி, மாவட்ட அமைப்பாளர் சொ.ஜீவன்தாசு, பகுத்தறிவாளர் கழக மாவட்டச் செயலாளர் நா.இராமு, அரக்கோணம் நகர செயலாளர் பெரியார் நேசன், ஏசுராசா, காவேரிப்பாக்கம் பகுத்தறிவாளர் கழகத்தலைவர்போ.பாண்டு ரங்கன் ஆகியோர் கருத்துரை வழங்கினர்
நிறைவாக மாவட்ட இளை ஞரணி தலைவர் வெ.பெரி யார்செல்வம் நன்றி கூறினார்.
நவம்பர் 26 இல் ஈரோட்டில் நடைபெறவுள்ள சுயமரியாதை இயக்கம் குடிஅரசு நூற்றாண்டு விழாவில் பங்கேற்பது எனவும்,
டிசம்பர் -2 இல் சென்னையில் நடைபெறும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 92 ஆவது பிறந்தநாள் விழாவில் குடும்பத்துடன் பங்கேற்று பெரியார் உலகத்திற்கு நிதியளித்து வாழ்த்தி, வணங்கி மகிழ்வதெனவும் தீர்மானிக்கப்பட்டது.
ஆசிரியர் அவர்களின் 92 ஆவது பிறந்தநாள்விழாவினை மாவட்டக் கழகம் சார்பில் டிசம்பர் 15 ஆம்தேதியன்று குடும்ப விழா -விருந்து, கொள்கைப் பெருவிழாவாக கொண்டாடி மகிழ்வதென தீர்மா னிக்கப்பட்டது.
திமுக சார்பில் நடத்தப்பட்ட பேச்சுப் போட்டியில் பங்கேற்று பாராட்டும்,பரிசும்பெற்ற உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றத்தலைவர், பகுத்தறிவாளர் இரா.தமிழ்வாணனுக்குப் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
மேலும், உடல்நலக்குறைவால் சிகிச்சைப் பெற்று இல்லம் திரும்பி யுள்ள மாவட்ட பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் த.க.பா.புகழேந்தியையும் சந்தித்து நலம் விசாரித்தனர்.