அதானி நிறுவனத்துடன் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு கடந்த மூன்று ஆண்டுகளாகத் தொடர்பில்லை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி விளக்கம்

Viduthalai
1 Min Read

கரூர், நவ.22 “தமிழ்நாடு மின் வாரியத்துக்கு அதானி நிறுவனத்தோடு கடந்த 3 ஆண்டுகளாக வணிக ரீதியான தொடர்புகள் இல்லை,” என தமிழ்நாடு மின் துறை அமைச்சர் வி. செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.
இது குறித்து கரூரில் செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, “அதானி குழுமத்தின் மீது அமெரிக்காவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது குறித்து சமூக ஊடகங்களில் செய்திகளை பார்த்தேன்.

பல மாநிலங்கள் அதில் குறிப்பிட்டு சொல்லப்பட்ட நிலையில், தமிழ்நாடு என ஒரு வரி சேர்க்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு மின்சார வாரி யத்தைப் பொறுத்தவரை அதானி நிறுவனத்தோடு எந்த விதமான வணிக ரீதியிலான தொடர்புகளும் கடந்த 3 ஆண்டுகளாக இல்லை என்பதை தெளிவுப்படுத்தி விடுகிறேன். தமிழ்நாடு மின் தேவையை கருத்தில் கொண்டு மத்திய மின்சார துறையோடு இருக்கும் அமைப்புகளோடு 1,500 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய ஒப் பந்தங்கள் செய்யப்பட்டு அந்த நிறுவனத்துடன்தான் தமிழ்நாடு மின்சார வாரியம் புரிந்துணர்வு செய்துள்ளது.

சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட் இது ஒன்றிய அரசு நிறுவனம். அந்த நிறுவனங்கள்தான் யாரெல்லாம் உற்பத்தி செய்கிறார்களோ, அவர்கள் அந்த நிறுவனத்தோடு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்வர். அந்த நிறுவனம் மற்ற மாநிலங்களிடம் என்ன தேவை என்பதைக் கேட்டு விலை இறுதி செய் யப்படுகிறது.

அதன்பிறகு தான் அந்தந்த மாநில அரசுகளோடு ஒன்றிய அரசு நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யும். அப்படிதான் அந் நிறுவனத்தோடு மிக குறைந்த விலையில் மிக குறைந்த விலையில் ரூ.2.61-க்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதே அதிமுக ஆட்சியில் ரூ.7.01-க்கு கொள்முதல் செய்யப்பட்டது.

சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் ஒன்றிய அரசின் எரிசக்தி துறையின் அங்கம். அதில்தான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. சமூக ஊடங்களில் தகவல்களை பதிவிடுபவர்கள் இதை தெளிவுபடுத்திக் கொண்டு பதிவிடவேண்டும். என்னி டமோ அல்லது மின் துறை அதிகாரிகளிடடோ கேட்டால் தெளிவுப்படுத்த தயாராக உள்ளோம்,” என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *