வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி புயலாக மாறுகிறது

1 Min Read

சென்னை, நவ.21 வங்கக் கடலின் தென்கிழக்கு பகுதியில் அந்தமான் அருகே நவ.23-ஆம் தேதி புயல் சின்னம் (காற்றழுத்த தாழ்வுப் பகுதி) உருவாக வாய்ப்புள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் நவ.25 முதல் பரவலாக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தெற்கு அந்தமான் அருகே வியாழக்கிழமை (21.11.2024) வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகிறது. இது வலுவடைந்து தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நவ.23-ஆம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவாகக்கூடும். இது மேற்கு வடமேற்கு திசையில் நகா்ந்து நவ.25-இல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப் பெறக்கூடும். இதன் காரணமாக தமிழ் நாட்டில் நவ.25 முதல்
28-ஆம் தேதி வரை கன மழை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெற்று புயலாக மாறும் நிலையில், அதற்கு ‘ஃபென்கால்’ என பெயா் சூட்டப்படலாம் எனக் கூறப்படுகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *