வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி புயலாக மாறுகிறது

Viduthalai
1 Min Read

சென்னை, நவ.21 வங்கக் கடலின் தென்கிழக்கு பகுதியில் அந்தமான் அருகே நவ.23-ஆம் தேதி புயல் சின்னம் (காற்றழுத்த தாழ்வுப் பகுதி) உருவாக வாய்ப்புள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் நவ.25 முதல் பரவலாக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தெற்கு அந்தமான் அருகே வியாழக்கிழமை (21.11.2024) வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகிறது. இது வலுவடைந்து தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நவ.23-ஆம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவாகக்கூடும். இது மேற்கு வடமேற்கு திசையில் நகா்ந்து நவ.25-இல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப் பெறக்கூடும். இதன் காரணமாக தமிழ் நாட்டில் நவ.25 முதல்
28-ஆம் தேதி வரை கன மழை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெற்று புயலாக மாறும் நிலையில், அதற்கு ‘ஃபென்கால்’ என பெயா் சூட்டப்படலாம் எனக் கூறப்படுகிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *