மணிப்பூர் மாநில தலைமை நீதிபதி ஜஸ்டிஸ் டி.கிருஷ்ணகுமார் அவர்களுக்கு நமது வாழ்த்துகள்!

1 Min Read

சென்னை உயர்நீதி மன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக சில மாதங்கள் பொறுப் பேற்று சிறப்பாக கட மையாற்றியவரும் மூத்த நீதிபதிகளில் ஒருவருமான ஜஸ்டீஸ் திரு. டி. கிருஷ்ணகுமார் அவர்களை, உச்சநீதிமன்றத்தின் ‘கொலீஜியம்’ இவரது ஆற்றல், அனுபவம் குறித்துப் பாராட்டி, மணிப்பூர் மாநில உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பரிந்துரைத்து, குடியரசுத் தலைவரும் அதை ஏற்று, இவரை அப்பெரும் பதவிக்கு நியமனம் செய்துள்ளார்.

இது வரவேற்கத்தக்க நியமனம் என்பதோடு இவரைப் பரிந்துரைக்கும் பதிவில், உச்சநீதிமன்ற கொலீஜியம். ‘‘இவர் உயர்நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி என்பதோடு, பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவரும் கூட’’ என்பதை ஒரு முக்கியக் காரணியாகக் குறிப்பிட்டிருப்பது, உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற நீதிபதிகள் பரிந்துரைகளிலும் நியமனங்களிலும் நமது இயக்கம் தொடர்ந்து வலியுறுத்தி வந்த ‘அரசியல் சட்டப்படிக்கான சமூகநீதி பின்பற்றப்பட வேண்டும்’ என்ற கொள்கை – கோட்பாடு கோரிக்கையினை ஏற்றுள்ள நிலைக்கான வெற்றியும் ஆகும்!
முன்பு பல ஆண்டுகளாக ஏற்கப்படாத இச்சமூகநீதி, இப்போது வெளிப்படையாகவே முக்கியத் தகுதிகளில் ஒன்றாகவும் சமூகநீதி ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது பாராட்டத்தக்கது.

இனி காலி இடங்களை நிரப்பும் போது இதற்குரிய முக்கியத்துவம் முன்னுரிமை பெற வேண்டும். நியமனம் பெற்றவர். ‘‘He is endowed with high level of integrity and honesty’’ என்றும் குறிப்பிட்டுள்ளது மிகவும் கோடிட்டுக் காட்டப்பட வேண்டிய மகிழ்ச்சியான செய்தி.
மணிப்பூர் மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மாண்பமை ஜஸ்டிஸ் டி. கிருஷ்ணகுமார் அவர்களுக்கு நமது வாழ்த்துகள்.

கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்

சென்னை 
21.11.2024 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *