கலைஞரின் கனவு இல்ல திட்டம் மற்றும் மூன்று திட்டங்களுக்கு ரூ. 1,747 கோடி ஒதுக்கீடு – முழு வீச்சில் பணிகள் தமிழ்நாடு அரசு அறிவிப்பு

2 Min Read

சென்னை, நவ. 21- கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் புதிய கான்கிரீட் வீடுகள் கட்டுதல், ஊரக வீடுகள் சீரமைப்பு திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்துக்கு ரூ.1747.50 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:
“கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 2024-2025ஆம் ஆண்டில் ஒரு லட்சம் புதிய கான்கிரீட் வீடுகள் கட்ட ஒரு வீட்டுக்கு ரூ.3.50 லட்சம் வீதம் ரூ.3500 கோடிக்கு அனுமதி ஆணை வழங்கப்பட்டுள்ளது.

தற்சமயம் வரை முதற்கட்டமாக அரசால் ரூ.300 கோடி நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டு, இதுவரை பயனாளிகளுக்கு வீட்டின் கட்டுமான நிலைக்கு ஏற்ப ரூ.252 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர பயனாளிகள் பயன டையும் வகையில், குறைந்த விலையில் சிமெண்ட் மூட்டைகள் டான்செம் நிறுவனத்திடமிருந்தும், இரும்பு கம்பிகள் ஒப்பந்தம் மூலம் கொள்முதல் செய்து வழங்கப்பட்டு வருகிறது.

இத்திட்டத்துக்கு அரசால், ஏற்கெனவே, ரூ.300 கோடி வழங்கப் பட்டுள்ள நிலையில் தற்போது மேலும், ரூ.500 கோடி வழங்கப்பட்டு வீடுகளின் கட்டுமானத்திற்கேற்ப பயனாளிகளின் வங்கிகணக்கிற்கு நேரடியாக தொகை விடுவிக்கப்பட்டு வருகிறது.

அதே போல், ஊரக வீடுகள் சீரமைத்தல் திட்டத்தின் கீழ், இந்நிதியாண்டில் ஒரு லட்சம் வீடுகளை சீரமைக்க அனுமதி வழங்கப்பட்டு, அரசால் ஏற்கெனவே, ரூ.150 கோடி வழங்கப்பட்டிருந்த நிலையில் தற்சமயம் மேலும் ரூ.450 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.

அதே போல், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் – II-இன் கீழ், கிராம ஊராட்சியில் தேவைப்படும் அடிப்படை உட்கட்டமைப்பு பணிகள் கண்டறியப்பட்டு செயல்படுத்தப் படுகிறது.

இத்திட்டத்தில், 53,779 பணிகள் கடந்த மூன்றாண்டுகளில் எடுக்கப் பட்டு முடிக்கப்பட்டுள்ளன. நடப்பாண்டில், இத்திட்டத்தின் கீழ் 2,482 கிராம ஊராட்சிகளில் 15,695 பணிகள் எடுக்கப்பட்டு, 12,722 பணிகள், முடிக்கப்பட்டுள்ளன. இதுவரை, அரசால் ரூ.347.50 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டங்களின் கீழ் எடுக்கப்பட்டுள்ள பணிகளில் முழுவீச்சில் சிறப்பாக நடைபெற்று வருகிறது” என அதில் கூறப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *