திருச்சி: பகுத்தறிவாளர்கள் மாநாட்டில் பெருந்திரளாக பங்கேற்போம்! காரைக்கால் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடலில் முடிவு

Viduthalai
2 Min Read

காரைக்கால், நவ.21 காரைக்கால் மாவட்ட கழகத்தின் கலந்துரையாடல் கூட்டம் புதுச்சேரி மாநில கழக தலைவர் சிவ. வீரமணி தலைமையில் காரைக்கால் மாவட்ட திராவிடர் கழக தலைவர் குரு.கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட செயலாளர் பொன்.பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலையில், காரைக்கால் மாதா கோயில் வீதியில் உள்ள சிவவீரமணி அலுவலகத்தில் 17.11.2024 அன்று மாலை 6 மணி அளவில் நடைபெற்றது.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மா னங்கள் வருமாறு:
26.11.2024 அன்று ஈரோட்டில் நடைபெறும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு, ‘குடிஅரசு’ இதழ் நூற்றாண்டு விழா திறந்தவெளி மாநாட்டில் காரைக்கால் மாவட்டக் கழகம் சார்பில் அதிக அளவில் கழகத் தோழர்க ளோடு கலந்து கொண்டு சிறப்பிப்பது எனவும்,
டிசம்பர் மாதம் 2 ஆம் தேதி சென்னை பெரியார் திடலில் நடைபெறும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் சுயமரி யாதை நாள் 92 ஆவது பிறந்தநாள் விழாவில் காரைக்கால் மாவட்டத்தின் சார்பில் கழகத் தோழர்கள் கலந்து கொண்டு, ஆசிரியர் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிப்பதோடு ‘விடுதலை’ சந்தா, பெரியார் உலகத்திற்கு நிதி வழங்குவது எனவும்,
டிசம்பர் 24 பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் நினைவு நாளன்று காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள அறிவுலக ஆசான் தந்தை பெரியார் சிலைக்கு, ஒத்த கருத்துள்ள அமைப்புகளோடு திராவிடர் கழகத்தின் சார்பில் ஊர்வலமாகச் சென்று மாலை அணிவித்து மரியாதை செய்வதோடு, தெருமுனை கூட்டங்களை நடத்துவது எனவும்,
டிசம்பர் 28, 29 ஆகிய நாள்களில் திருச்சி யில் நடைபெறும் இந்திய பகுத்தறிவாளர் சங்கங்களின் கூட்டமைப்பு மாநாட்டில் காரைக்கால் மாவட்டத்தின் சார்பில் பெருந்திரளாகக் கலந்து கொள்வதெனவும்,
காரைக்கால் மாவட்ட கழகத்தின் வரலாறை, காரைக்கால் மாவட்ட கழகத்திற்கு தலைமை ஏற்று பணி செய்த தலைவர்கள், பெரியாரின் பெரும் தொண்டர்களின் கழக களப் பணிகளைத் தொகுத்து ‘‘கழகம் கண்ட களங்கள்’’ என்று புத்தகமாக வெளியிட இருப்பதால், அதற்கான தரவுகளோடு நிகழ்வுகளை கழகத் தோழர்கள் தொகுத்து எழுதி வழங்க வேண்டும் எனவும், நவீன குலக்கல்வி திட்டமான தேசிய கல்விக் கொள்கை திட்டத்தில் புதுச்சேரியில் நடைமுறையில் இருக்கும் புதிய கல்விக் கொள்கை திட்டத்தில் தமிழ் கட்டாய பாடமாக இல்லை. விருப்பப் பாடமாக இடம் பெற்று இருக்கிறது. எனவே, இதனை மாற்றி தமிழை அனைத்து வகுப்புகளிலும் கட்டாய பாடமாக்க, புதுச்சேரி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்,
இக்கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பி னர் க.பதிஜெய்சங்கர், காரைக்கால் மாவட்ட கழகத்தின் துணை செயலாளர் செ.செந்தமிழன், காரைக்கால் மாவட்ட திராவிடர் கழகத்தின் இளைஞரணி செயலாளர் அ.லூயிஸ் பியர், திராவிட மாணவர் கழக காரை மாவட்ட செயலாளர் அறிவுச்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *