திருச்சியில் பகுத்தறிவாளர் கழக மாநாட்டில் பெருந்திரளாக பங்கேற்க அரியலூர் மாவட்ட ப.க. முடிவு!

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

அரியலூர், நவ.20-அரியலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக 10.11.2024 அன்று மாலை 5 மணிக்கு சிறப்பாக நடைபெற்றது. அரியலூர் சிவக்கொழுந்து இல்லத்தில் நடைபெற்ற இந்த கலந்துரையாடல் கூட்டத்திற்கு மாவட்ட ப.க. செயலாளர் மு. ஜெயராஜ் தலைமையேற்க, தலைமைக்கழக அமைப்பாளர் க.சிந்தனைச்செல்வன், மாவட்டத் தலைவர் விடுதலை நீலமேகன், மாவட்ட செயலாளர் மு.கோபாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநில ப.க. அமைப்பாளர் தங்க.சிவமூர்த்தி திருச்சியில் நடைபெற உள்ள பகுத்தறிவாளர் கழக மாநாட்டின் சிறப்புகளை பற்றியும் பொறுப்பா ளர்கள் தோழர்கள் பங்கேற்பு குறித்தும் நிதி வசூல் குறித்தும் விளக்கி சிறப்புரையாற்றினார். ரவி நன்றி கூறினார்.

கூட்டத்தில், எதிர்வரும் டிசம்பர் 28, 29 ஆகிய நாள்களில் திருச்சியில் நடைபெற உள்ள அகில இந்திய பகுத்தறிவாளர் சங்கங்க ளின் மாநாட்டிற்கு அரியலூர் மாவட்டத்திலிருந்து தோழர்கள் பெருந்தி ரளாக பங்கேற்பதெனவும் பெருமளவில் நிதி வசூல் செய்து கொடுப்பது எனவும், ஆசிரியர்களுக்கு பகுத்தறிவு மனப்பான்மையை வளர்க்கும் பயிற்சிப் பட்டறையை அரியலூர் மாவட்டத்தில் சிறப்பாக நடத்திடுவதெனவும் முடிவு செய்யப்பட்டது .
இக்கூட்டத்தில், மாவட்ட இணைச்செயலாளர் ரத்தின ராமச்சந்தி ரன் மாவட்ட துணைத் தலைவர் இரா.திலீபன் செந்துறை ஒன்றிய பொறுப்பாளர்கள் ராசா செல்வகுமார் மு. முத்தமிழ்செல்வன், அரியலூர் ஒன்றிய தலைவர் சி.சிவக்கொழுந்து, ஆட்டோ தர்மா, ஆசிரியர்கள்
பா. ஆனந்தராஜா, வெ.இராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *