Viduthalai Daily NewspaperViduthalai Daily NewspaperViduthalai Daily Newspaper
Notification Show More
Font ResizerAa
  • தந்தை பெரியார்
  • ஆசிரியர் அறிக்கை
  • திராவிடர் கழகம்
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • தலையங்கம்
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • உலகம்
  • கட்டுரை
  • மேலும்
    • கழகம்
    • அப்பா மகன்
    • அரசு
    • அறிவியல்
    • அறிவியல் அரங்கம்
    • ஆசிரியர்
    • ஆசிரியர் உரை
    • ஆசிரியர் விடையளிக்கிறார்
    • இந்நாள் – அந்நாள்
    • இளைஞர் அரங்கம்
    • உடற்கொடை
    • ஊசி மிளகாய்
    • ஒற்றைப் பத்தி
    • கடிதம்
    • கழகக் களத்தில்
    • கவிதை
    • குரு – சீடன்
    • சட்டமன்றச் செய்திகள்
    • சிறப்புக் கட்டுரை
    • தந்தை பெரியார் அறிவுரை
    • தலையங்கம்
    • நடக்க இருப்பவை
    • நூல் அறிமுகம்
    • நேர்காணல்
    • பகுத்தறிவுக் களஞ்சியம்
    • பதிலடிப் பக்கம்
    • பிற இதழிலிருந்து…
    • பெரியார் கேட்கும் கேள்வி!
    • போர்வாள்!
    • மகளிர் அரங்கம்
    • மருத்துவம்
    • மறைவு
    • மற்றவை
    • மின்சாரம்
    • வரலாற்றுச் சுவடுகள்
  • E-Paper
  • OTTOTTOTT
Reading: வன்முறையின் உச்சத்தில் மணிப்பூர் கட்சி அலுவலகங்கள் தீக்கிரை – அரசு அலுவலகங்களுக்கு பூட்டு
Share
Font ResizerAa
Viduthalai Daily NewspaperViduthalai Daily Newspaper
Search
  • தந்தை பெரியார்
  • ஆசிரியர் அறிக்கை
  • திராவிடர் கழகம்
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • தலையங்கம்
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • உலகம்
  • கட்டுரை
  • மேலும்
    • கழகம்
    • அப்பா மகன்
    • அரசு
    • அறிவியல்
    • அறிவியல் அரங்கம்
    • ஆசிரியர்
    • ஆசிரியர் உரை
    • ஆசிரியர் விடையளிக்கிறார்
    • இந்நாள் – அந்நாள்
    • இளைஞர் அரங்கம்
    • உடற்கொடை
    • ஊசி மிளகாய்
    • ஒற்றைப் பத்தி
    • கடிதம்
    • கழகக் களத்தில்
    • கவிதை
    • குரு – சீடன்
    • சட்டமன்றச் செய்திகள்
    • சிறப்புக் கட்டுரை
    • தந்தை பெரியார் அறிவுரை
    • தலையங்கம்
    • நடக்க இருப்பவை
    • நூல் அறிமுகம்
    • நேர்காணல்
    • பகுத்தறிவுக் களஞ்சியம்
    • பதிலடிப் பக்கம்
    • பிற இதழிலிருந்து…
    • பெரியார் கேட்கும் கேள்வி!
    • போர்வாள்!
    • மகளிர் அரங்கம்
    • மருத்துவம்
    • மறைவு
    • மற்றவை
    • மின்சாரம்
    • வரலாற்றுச் சுவடுகள்
  • E-Paper
  • OTTOTTOTT
Follow US
உலகம்

வன்முறையின் உச்சத்தில் மணிப்பூர் கட்சி அலுவலகங்கள் தீக்கிரை – அரசு அலுவலகங்களுக்கு பூட்டு

Last updated: November 20, 2024 3:50 pm
Published November 20, 2024
உலகம்
SHARE

இம்பால், நவ.20- மணிப்பூரில் கட்சி அலுவலகங்களுக்கு தீ வைத்தும், அரசு அலுவலகங்களுக்கு பூட்டுப்போட்டும் வன்முறையாளர்கள் வெறியாட்டத்தில் இறங்கினர். வன்முறையை கட்டுப்படுத்த 5 ஆயிரம் துணை ராணுவ வீரர்கள் விரைகிறார்கள்.
மணிப்பூரில் பழங்குடி அந்தஸ்து பிரச்சினையால் மெய்தி, குக்கி இன மக்களுக்கு இடையே கடந்த ஆண்டு மே மாதம் வெடித்த கலவரம் ஒன்றரை ஆண்டுகளாக நீடிக்கிறது. கடந்த சில மாதங்களாக சற்றே ஓய்ந்திருந்த இந்த மோதல்கள், இந்த மாத தொடக்கத்தில் இருந்து மீண்டும் வேகமெடுத்தது. இதில் உச்சபட்சமாக ஜிரிபாம் மாவட்டத்தில் கடந்த 11ஆம் தேதி குகி இனத்தை சேர்ந்த 10 பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினருடன் நடந்த சண்டையில் கொல்லப்பட்டனர். அதற்கு பதிலடியாக மெய்தி இனத்தை சேர்ந்த 3 பெண்கள் மற்றும் 3 குழந்தைகளை குகி பயங்கரவாதிகள் கடத்திச்சென்றனர். அதில் 5 பேரின் உடல்கள் சமீபத்தில் கண்டெடுக்கப்பட்டன. இது மெய்தி இனத்தினரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

துப்பாக்கிச் சூடு
இதைத்தொடர்ந்து மாநி லம் முழுவதும் மீண்டும் கலவ ரம் மூண்டுள்ளது. பல மாவட்டங்களை சேர்ந்த அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் என 10-க்கும் மேற்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் வீடுகளை சூறையாடி தீ வைத்தனர். முதலமைச்சர் பைரேன் சிங்கின் பூர்வீக வீடு மீதும் தாக்குதல் முயற்சி நடந்தது. ஜிரிபாம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு வன்முறையில் இறங்கிய கும்பல் மீது துப்பாக்கிச்சூடு நடந் தது. இதில் இளைஞர் ஒருவர் கொல்லப் பட்டார். அவரை பாதுகாப்புப் படையினர் கொன்றதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

கட்சி அலுவலகங்கள் எரிப்பு
அங்குள்ள பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் அலுவலகங்களுக்கு நேற்று வன்முறையாளர்கள் தீ வைத்தனர். அத்துடன் சட்டமன்ற சுயேச்சை உறுப் பினர் ஒருவரின் வீட்டையும் சூறையாடி கொளுத்தினர். இம்பால் பள்ளத்தாக்கு பகுதியில் மெய்தி மக்களிடம் செல்வாக்கு பெற்ற அமைப்பான ‘மணிப்பூர் இறையாண்மைக்கான ஒருங்கிணைப்புக் குழு’வைச் (கோகாமி)சேர்ந்தவர்கள் களத்தில் இறங்கி போராட்டத்தை முன்னெடுத்தனர்.

அரசு அலுவலகங்களுக்கு பூட்டு
மாநிலத்தில் 12 ஆண்டாக நீடிக்கும் கலவரத்தை அடக்க ஒன்றிய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் குற்றம் சாட்டிய அவர்கள், 18.11.2024 அன்று ஒன்றிய-மாநில அரசுகளின் அலுவலகங்களுக்கு பூட்டுப் போட்டனர். அந்தவகையில் தலைநகரில் உள்ள தலைமை தேர்தல் அதி காரி அலுவலகத்தின் பிரதான கேட்டுக்கு சங்கிலி மற்றும் பூட்டுபோட்டு பூட்டினர்.

Also read

அணு ஆயுதங்களை கையாளும் குழுவுடன் பாகிஸ்தான் பிரதமர் ஆலோசனை
ஆசிரியரின் ஆஸ்திரேலியா பயணம்சில பாடங்கள் (2)

காலவரையற்ற ஊரடங்கு
மாநிலத்தின் பல பகுதிகளில் மீண்டும் வன்முறை மூண்டதை தொடர்ந்து இம்பால் கிழக்கு மற்றும் மேற்கு, பிஷ்ணுபூர், தவுபல் உள்பட இம்பால் பள்ளத்தாக்கில் உள்ள மாவட்டங்களில் கடந்த 16ஆம் தேதி முதல் காலவரையற்ற ஊரடங்கு அமலில் உள்ளது. மேலும் 2 நாட்களுக்கு இணையதள சேவையும் துண்டிக்கப்பட்டது. இது நேற்று காங்போபி, சூரச்சந்த் பூர் மாவட்டங்களுக்கும் விரிவு படுத்தப்பட்டதுடன், 20ஆம் தேதி வரை இந்த நடவடிக்கை அமலில் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொதி நிலையில் மக்கள்
மறுபுறம் மாநிலம் முழுவதும் காவல்துறையினருடன் இணைந்து ராணுவமும் வன்முறையை கட்டுப் படுத்தும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலைத்து வருகின்றனர். ஆனாலும் கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. மாநிலம் முழுவதும் பெரும் கொதி நிலையில் இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக் கின்றன.

மாநில அரசில் சலசலப்பு
மணிப்பூரில் மீண்டும் கட்டுக் கடங்காத வன்முறை மூண்டிருப்பது, மாநில அரசிலும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. வன்முறையை தடுக்கத் தவறியதாக கூறி தேசிய மக்களின் கட்சி ஆளும் பா.ஜனதா கூட்டணியில் இருந்து சமீபத்தில் விலகியது. இதைத்தொடர்ந்து தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்தை 18.11.2024 அன்று முதலமைச்சர் பைரேன்சிங் கூட்டினார். இதில் மாநில சட்ட ஒழுங்கு நிலவரம் குறித்து விவாதிக்கப்பட்டது. 60 உறுப்பினர் கொண்டுள்ள சட்ட மன்றத்தில் 32 உறுப்பினர்கள்கள் பா.ஜனதாவுக்கு இருப்பதால் ஆட்சிக்கு எந்தவித ஆபத்தும் இல்லை என்றாலும், சட்டமன்ற பா.ஜ.க. உறுப்பினர்களே ஒன்றிய, மாநில அரசுகளுக்கு எதிராக திரும்பியுள்ளனர் என்பதும் குறிப் பிடத்தக்கது.

பதவி விலகல்
அதேநேரம் பா.ஜனதாவுக்குள்ளும் அதிருப்திகள் அதிகரித்து வருகின்றன. அந்தவகையில் மாநில பா.ஜனதாவின் எஸ்.சி. பிரிவு துணைத்தலைவர் தனது பதவியிலிருந்து விலகியுள்ளார். இதைப்போல வன்முறைக்கு முற்றுப் புள்ளி வைக்காவிட்டால், தாங்கள் பதவி விலகப் போவதாக காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் 5 பேர் மிரட்டல் விடுத்துள்ளனர். இதைப்போல பா.ஜனதா கட்சி சட்டமன்ற உறுப்பி னர்கள் சிலரும் பதவி விலக முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

அமித்ஷா பதவி விலக வேண்டும்
இதற்கிடையே மணிப்பூரில் பா.ஜன தாவின் இரட்டை என்ஜின் அரசு முற்றிலும் தோல்வி அடைந்திருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இந்த விவகாரத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலகவேண்டும் என கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய் ராம்ரமேஷ் கூறியுள்ளார்.
இந்த நிலையில் மணிப்பூரில் அமைதியை ஏற்படுத்துவது குறித்து உயர்மட்ட அதிகாரிகளுடன் உள் துறை அமைச்சர் அமித்ஷா நேற்று 2-ஆவது நாளாக ஆலோசனை நடத்தினார். மணிப்பூரில் கூடிய விரைவில் நிலைமையை கட்டுப் பாட்டுக்குள் கொண்டுவர பாதுகாப்பு அதிகாரிகளுக்கு உத்தர விட்டார். மணிப்பூரில் நிலவரம் மோசமடைந் துள்ளதை தொடர்ந்து அங்கு பாது காப்பு பணிகளுக்காக 5 ஆயிரம் துணை ராணுவப்படை களை அனுப்ப உள்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

Ad imageAd image

You Might Also Like

மூன்றாவது மொழியைப் படிப்பது நேர விரயம்! ஜப்பான் வாழ் ஆய்வாளர் கருத்து!

நூல்கள் அன்பளிப்பு

அடுத்த போப் தேர்வு; வாக்களிக்கும் 4 இந்தியர்கள்

அதிக வேலை நேரம்: நெருக்கடியைச் சந்திக்கும் அய்ரோப்பிய சுகாதார அமைப்புகள்

அமெரிக்கா கொடுத்த நெருக்கடி மலேசியாவுக்குள் சட்டவிரோத நுழைவு வட இந்தியர்கள் உள்பட 506 பேர் கைது

TAGGED:அமித்ஷாதுப்பாக்கிச் சூடு
Share
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Ad imageAd image
- Advertisement -
Ad imageAd image

நடக்கவிருக்கும் நிகழ்ச்சிகள்

About US

"Viduthalai" is a Tamil newspaper founded by the social reformer Thanthai Periyar, in 1935. Aimed at promoting rationalism, social justice, and gender equality, it played a crucial role in advocating for the rights of marginalized communities in Tamil Nadu. The newspaper remains significant in the legacy of Periyar’s movement for a more equitable society. Under the able leadership of K. Veeramani, the current editor of "Viduthalai," the newspaper continues to uphold the values of Periyar's vision for social justice and equality. Veeramani, a prominent activist and advocate for rationalism, has revitalized the publication, ensuring it addresses contemporary issues while staying true to its foundational principles.
Quick Link
  • தந்தை பெரியார்
  • ஆசிரியர் அறிக்கை
  • திராவிடர் கழகம்
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • தலையங்கம்
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • உலகம்
  • கட்டுரை
  • மேலும்
    • கழகம்
    • அப்பா மகன்
    • அரசு
    • அறிவியல்
    • அறிவியல் அரங்கம்
    • ஆசிரியர்
    • ஆசிரியர் உரை
    • ஆசிரியர் விடையளிக்கிறார்
    • இந்நாள் – அந்நாள்
    • இளைஞர் அரங்கம்
    • உடற்கொடை
    • ஊசி மிளகாய்
    • ஒற்றைப் பத்தி
    • கடிதம்
    • கழகக் களத்தில்
    • கவிதை
    • குரு – சீடன்
    • சட்டமன்றச் செய்திகள்
    • சிறப்புக் கட்டுரை
    • தந்தை பெரியார் அறிவுரை
    • தலையங்கம்
    • நடக்க இருப்பவை
    • நூல் அறிமுகம்
    • நேர்காணல்
    • பகுத்தறிவுக் களஞ்சியம்
    • பதிலடிப் பக்கம்
    • பிற இதழிலிருந்து…
    • பெரியார் கேட்கும் கேள்வி!
    • போர்வாள்!
    • மகளிர் அரங்கம்
    • மருத்துவம்
    • மறைவு
    • மற்றவை
    • மின்சாரம்
    • வரலாற்றுச் சுவடுகள்
  • E-Paper
  • OTTOTTOTT
Other Links
  • Print Subscription
  • Privacy Policy
  • Contact
Our Other Publications
  • Unmai Magazine
  • The Modern Rationalist
  • Periyar Pinju Children’s Magazine
  • Dravidian Book House
© Viduthalai. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?