சென்னை, நவ. 20- சென்னை 2ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத் தில், கலங்கரை விளக்கம் – பூந்தமல்லி வரையிலான 4ஆவது வழித்தடத்தில் 8 கி.மீ. தொலைவுக்கு அடிக்கட்டுமான தூண்கள் அமைக்கும் பணிகள் 100 சதவீதம் நிறைவடைந் துள்ளன.
சென்னையில் இரண் டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், 116.1 கி.மீ. தொலைவில் 3 வழித் தடங்களில் செயல்படுத்தப் படுகிறது. இவற்றில் கலங்கரை விளக்கம் – பூந்தமல்லி வரையிலான (26.1 கி.மீ.) 4-ஆவது வழித் தடம் ஒன்றாகும்.
இந்த வழித்தடத்தில், கலங்கரை விளக்கம் முதல் கோடம்பாக்கம் மேம்பாலம் வரை சுரங்கப் பாதையாகவும், கோடம் பாக்கம் பவர் ஹவுஸ் முதல் பூந்தமல்லி வரை உயர்மட்ட பாதையாகவும் அமைக்கப்படுகிறது.
இந்த வழித்தடத்தில் 9 சுரங்க மெட்ரோ ரயில் நிலையங்களும், 18 உயர் மட்ட மெட்ரோ ரயில் நிலையங்களும் இடம்பெற உள்ளன. தற்போது, பல்வேறு இடங்களில் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், கோடம் பாக்கம் பவர் ஹவுஸ் – போரூர் சந்திப்பு நிலை யத்துக்கு இடையே உயர் மட்ட வழித்தடத்தில் அடிக்கட்டுமான தூண்கள் அமைக்கும் பணிகள் 100 சதவீதம் நிறைவடைந் துள்ளன. இப்பணிகளை வெற்றிகரமாக முடித்த ஊழியர்கள், அதிகாரிகளை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் திட்ட இயக்குநர் தி.அர்ச்சுனன், தலைமை பொது மேலா ளர் எஸ்.அசோக்குமார் பாராட்டினர்.
இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:
இப்பணி நிறைவடைந்த தன் மூலம், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஒரு குறிப்பிடத்தக்க மைல் கல்லை எட்டியுள்ளது. இந்த உயர்மட்ட வழித் தடம் 8 கி.மீ. தொலை வுக்கு 4 இரட்டை அடுக்கு நிலையங்கள் மற்றும் 5 ஒற்றை அடுக்கு நிலையங்களை கொண்டது.
இவற்றின் கட்ட மைப்பு மற்றும் வழித் தடத் தூண்களை தாங்கும் வகையில் தரையின் கீழ் 2,255 அடிக்கட்டு மானத் தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் திட்டக் குழுவும் ஒப்பந்ததாரர்களும் பல சவால்களை எதிர் கொண்டனர்.
இதில் குறிப்பாக 24.45 கி.மீ. தொலைவுக்கு பொது பயன்பாட்டில் உள்ள உயர் மின் விநியோக கம்பிகள், குடிநீர் குழாய்கள், தொலைத் தொடர்பு கேபிள்கள், மழைநீர் வடிகால் போன்றவற்றை மாற்று வழியில் செயல் படுத்துதல் மற்றும் நீர்வழிப் பாதையை மறுவடி வமைப்பு செய்தல், மாற்றி வழியில் செயல்படுத்துதல் ஆகியவை உள்ளடங்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.