தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 92ஆவது பிறந்த நாளன்று பொது மருத்துவ முகாம் மற்றும் குருதிக் கொடை வழங்கும் விழா

1 Min Read

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 92ஆவது பிறந்த நாளையொட்டி சென்னை பெரியார் திடலில் அமைந்துள்ள பெரியார் மணியம்மை மருத்துவமனையில் 2.12.2024 காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை பொது மக்களுக்கான சிறப்பு இலவச மருத்துவ முகாம் நடைபெறும். இம்மருத்துவ முகாமில் மருத்துவர்கள் கலந்துகொண்டு பொது மக்களுக்கு பொது மருத்துவம், மகளிர் நலம், குழந்தைகள் நலம், நீரிழிவு சார்ந்த நோய்களுக்கு மருத்துவம் மற்றும் சிறப்பு ஆலோசனைகள் வழங்க உள்ளனர். குருதிக் கொடை வழங்கும் நிகழ்வும் நடைபெறும்.
இதனை அனைவரும் பயன்படுத்திக் கொள்ளும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

நிர்வாகி பெரியார் மணியம்மை மருத்துவமனை, பெரியார் திடல், சென்னை – 7

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *