தென் சென்னை மாவட்ட துணைத் தலைவர் சி.செங்குட்டுவன் அவர்களுக்கு பாராட்டு

1 Min Read

அரசியல்

மன்னார்குடி மாவட்டம் வடுவூரில் அமைக்கப் பட்டிருந்த தந்தை பெரியாரின் சிலை, சாலை மேம்பாட்டு பணியின் காரணமாக தென்பாதி ஊராட்சி மன்றம் வழங் கிய இடத்தில் மறு சீரமைப்பு செய்யப்பட்டு 09.07.2023 அன்று வெகு சிறப்பாக திறக்கப்பட்டது.

சிலை சீரமைப்பு பணி முழுமையையும் தன் சொந்த செலவில் செய்து கொடுத்த தென்சென்னை மாவட்ட திராவிடர் கழக துணைத் தலைவர் சி.செங்குட்டுவனை 14.07.2023 அன்று மாலை தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் பாராட்டி, தலைவர் இரா,வில்வ நாதன் பயனாடை அணிவித்தார். உடன் செயலாளர் செ.ர. பார்த்தசாரதி, துணைச் செயலா ளர் கோ.வீ.ராகவன் மற்றும் சி.செங்குட்டுவன் அவர்களின் இணையரும் பங்கேற்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *