பகுத்தறிவாளர் கழக மேனாள் மாநில தலைவர் – பகுத்தறிவு ஆசிரியர் அணி மாநில தலைவர் – ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட மேனாள் தலைவர் பேராசிரியர் அன்பரசு, இளமைக்காலம் முதற்கொண்டு பெரியார் கொள்கையில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர் – ஆசிரியராக பணியாற்றியவர். 1.1.1930இல் பிறந்தவர் அவர் மறைவையொட்டி 16.11.2024 சனிக்கிழமை படத்திறப்பு நிகழ்ச்சி திருக்காட்டுப்பள்ளியை அடுத்த பழமானேரியில் தலைமைகழக அமைப்பாளர் ஆல்பர்ட் தலைமையில் லால்குடி கழக மாவட்ட தலைவர் வால்டர் முன்னிலையில் நடைபெற்றது. படத்தை திறந்து வைத்து பூவை புலிகேசி சிறப்புரையாற்றினார். லால்குடி மாவட்ட செயலாளர் அங்கமுத்து உள்பட பல கழக தோழர்கள் இரங்கல் உரையாற்றினர்.