ரயில்வே நிர்வாகம்? சென்னை வந்தே பாரத் ரயிலில் பயணியின் உணவில் வண்டு

1 Min Read

சென்னை, நவ.18 வந்தே பாரத் ரயிலில் பயணிக்கு வழங்கப்பட்ட உணவில் வண்டு இருந்த விவகாரத்தில், ஒப்பந்ததாரருக்கு தெற்கு ரயில்வே ரூ.50,000 அபராதம் விதித்துள்ளது. திருநெல்வேலியில் இருந்து சென்னைக்கு வந்தே பாரத் ரயில் நேற்றைக்கு முந்தைய நாள் காலை புறப்பட்டது.

இந்த ரயிலில் சி-2 பெட்டியில் பயணித்த ஒருவருக்கு வழங்கப்பட்ட சாம்பாரில் வண்டு இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக வெளியான காட்சிப் பதிவு இணையத்தில் வைரலானது. சாம்பாரில் வண்டு இருந்தது குறித்து பயணி புகார் அளித்ததை தொடர்ந்து,அந்த பயணியிடம் அதிகாரிகள் வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்டனர். உணவு விநியோகிக்கும் ஒப்பந்த நிறுவனம் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தனர். அந்த உணவை விநியோகம் செய்த ஒப்பந்ததாரரான பிருந்தாவன் ஃபுட் புராடக்ட்ஸ் நிறுவனத்துக்கு தெற்கு ரயில்வே ரூ.50,000 அபராதம் விதித்துள்ளது. ரயில்வே அதிகாரிகள் கூறும்போது, ‘‘சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரருக்கு ரூ.50,000 அபராதம் விதிக்கப்பட்டு, மேல் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்த நிகழ்வு குறித்து ரயில்வே விரிவான விசாரணை நடத்துகிறது. பயணிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தை உறுதி செய்வதில் ரயில்வே உறுதியாக உள்ளது’’ என்றனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *