கந்தர்வகோட்டை,நவ.18 புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றி யம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அக்கச்சிப்பட்டியில் குழந்தைகள் நாள் விழா நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் எம்.அருணா குழந்தைகள் நாளினையொட்டி வெளியிட்டுள்ள குழந்தை நாள்வாழ்த்து செய்தியை வாசித்து குழந்தைகளுக்கு வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது.
இந்நிகழ்விற்கு தலைமை ஆசிரியர் பொறுப்பு மணிமேகலை தலைமை வகித்தார். அறிவியல் ஆசிரியர் ரகமதுல்லா குழந்தை நாள் குறித்து பேசினார்.
குழந்தைகள் நாள் உறுதி மொழி எடுக்கப்பட்டது.
விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டப்பட்டது. இந்நிகழ்வில் ஆசிரியர்கள் சிந்தியா, நிவின், செல்விஜாய், வெள்ளைச்சாமி, ஹில்டா, கணினி ஆய்வக உதவியாளர் தையல்நாயகி உள்ளிட்டோர் கலந்துகொண்டு குழந்தைகள் நாள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
கந்தர்வகோட்டை அக்கச்சிப்பட்டி நடுநிலைப் பள்ளியில் குழந்தைகள் நாளினையொட்டி உறுதி மொழி
Leave a Comment