ஆவடி, நவ.18- ஆவடி மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் நேற்று (17.11.2024) காலை 10.30 மணிக்கு ஆவடி பெரியார் மாளிகையில் மாவட்ட தலைவர் வெ.கார்வேந்தன் தலைமையில், காப்பாளர் பா.தென்னரசு முன்னிலையில், ஆவடி நகர தலைவர் கோ.முருகன் வரவேற்பு ரையுடன், மாவட்ட செயலாளர் க.இளவரசன் ஒருங்கிணைப்பில் நடைபெற்றது.
முதலாவதாக ஆவடி நகர செய லாளர் தமிழ்மணி கடவுள் மறுப்பு கூற, சுயமரியாதைச் சுடரொளி பட்டா பிராம் சக்கரபாணி அவர்களைப் பற்றி திரு நின்றவூர் நகர கழக இளைஞரணி செயலாளர் சிலம்பரசன் நினைவு கூர்ந்தார்.
அடுத்ததாக செப்டம்பர் 20 மனோ கரன், அக்டோபர் 14 ரவிச்சந்திரன், 17 அரிகிருஷ்ணன் ஆகியோரின் பிறந்த நாள்கள் மற்றும் நவம்பர் 2 அன்று இணையேற்பு நாள் காணும் பட்டாபிராம் பகுதி திராவிடர் கழகத் தலைவர் இரா.வேல்முருகன்- வனஜா ஆகியோருக்கு மாவட்ட காப்பாளர் பா.தென்னரசு பயனாடை அணிவித்து மாவட்ட கழகத்தின் சார்பில் வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது.
பின்னர் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நவம்பர் 26 அன்று ஈரோட்டில் நடைபெறும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா மாநாட்டிற்கு மாவட்ட கழகம் சார்பில் தனி பேருந்தில் செல்வது எனவும்,
டிசம்பர் 2 அன்று தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு மாவட்டத்தில் கழகக் கொடிகளை ஏற்றுவது எனவும்,
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்க ளின் பிறந்த நாளை முன்னிட்டு ‘விடுதலை’ சந்தா மற்றும் பெரியார் உலகத்திற்கு நிதி திரட்டி வழங்குவது எனவும்,
டிசம்பர் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் திருச்சியில் நடைபெறும் பகுத்தறிவாளர் கழக மாநாட்டிற்கு தனி பேருந்தில் சென்று கலந்து கொள்வது எனவும் தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.
பெரியார் உலகத்திற்கு கழக தோழர்கள் ஆவடி மாவட்ட திரா விடர் கழக துணைத் தலைவர் மு.ரகுபதி, ராணி ரகுபதி ரூ.1000 சுந்தர்ராஜன் ரூ.1000, அரிகிருஷ்ணன் ரூ.1000, ஆவடி நகர திராவிடர் கழக தலைவர் கோ.முருகன் ரூ.500, துணைத் தலைவர் சி.வச்சிரவேல் ரூ.500, பட்டாபிராம் பகுதி தலைவர் இரா.வேல்முருகன் ரூ.500, அம்பத்தூர் பெரியார் பெருந்தொண்டர் அ.வெ.நடராசன் ரூ.500, பூவிருந்தவல்லி பகுதி கழகத் தலைவர் பெரியார் மாணாக்கன் ரூ.500, ஆவடி மனோகரன் ரூ.500, ஆவடி மாவட்ட கழக இளைஞரணி துணை செயலாளர் சென்னகிருட்டிணன் ரூ.500, திருவேற்காடு தோழர்கள் சின்னதுரை ரூ.500, பிரபாகரன் ரூ.500, பசுபதி ரூபாய் 500 என முதல் கட்டமாக வழங்கி உரை யாற்றினர்.
நிகழ்வில் ஆவடி மாவட்ட கழக இளைஞரணி செயலாளர் கலைவேந்தன், திருநின்றவூர் பகுதி திராவிடர் கழக செயலாளர் கீதா ராமதுரை, ஆவடி மாவட்ட பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் ஜெயராமன்,பட்டரவாக்கம் ரவிச்சந்திரன், மோகன் தாஸ், பெரியார் பிஞ்சு தருண் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிறைவாக ஆவடி மாவட்ட கழக துணை செயலாளர் பூவை தமிழ்ச்செல்வன் நன்றி கூறினார்.