‘தி இந்து’ நாளேடு ‘திராவிட மாடல்’ அரசுக்குப் பாராட்டு!
சென்னை, நவ. 18- தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் ‘புதுமைப் பெண்’ திட்டத்தால், மாநில கல்லூரிகளில் சேரும் மாணவிகளின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வருவதாக பாராட்டு தெரிவித்து ‘தி இந்து’ (17.11.2024) ஆங்கில நாளேடு செய்திக் கட்டுரை வெளியிட்டுள்ளது.
‘தி இந்து’ ஆங்கில நாளேட்டில்வெளியான கட்டு ரையின் தமிழாக்கம் வருமாறு:–
மாநிலத் திட்டக் குழு (SPC) மேற்கொண்ட புதுமைப் பெண் திட்டத்தின் ஆரம்ப மதிப்பீட்டில், 13,681 கூடுதல் மாணவர்கள் இந்த முயற்சியால் பயனடைந்துள்ளனர். 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் மட்டும் டிப்ளமோ படிப்புகளை வழங்கும் கல்லூரிகள் மற்றும் நிறுவனங்களில் மாண வர்கள் சேர்க்கை 6.9 சதவீதம் அதிகரித்துள்ளது.
அவர்களில், 38.6% ஆதிதிராவிடர்கள், 34.4% மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் 24.8%, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (BC). இந்த மதிப்பீட்டில், சேலத்தில் 8.9%, கல்லூரிமாணவர் சேர்க்கை அதிகமாக இருப்பதாகவும், சென்னை 5.8% என்றும்; தருமபுரி 5.5%; திருவண்ணாமலை 5.2%; நாமக்கல் 4.8%; மற்றும் கடலூர் 4.1% என சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
உயர்கல்வி நிறுவனங்களில் அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த பெண் குழந்தைகளின் சேர்க்கையை அதி கரிக்க, தமிழ்நாடு அரசு, புதுமைப் பெண் திட்டம் எனப்படும் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த முயற்சியின் கீழ், அரசுப் பள்ளிகளில் 6 ஆவது வகுப்பு முதல் 12 ஆவது வகுப்புவரை படித்தவர்களுக்கு, இளங்கலை, டிப்ளமோ, அய்.டி.அய். அல்லது அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு பாடப்பிரிவை முடிக்கும்வரை, அவர்களுக்கு மாதம் ரூ.1,000 நிதியுதவி வழங்கப்படுகிறது. ஊக்கத்தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது.
2023 ஆம் ஆண்டின் இறுதியில் பயனாளிகளின் எண்ணிக்கை 2,30,820. அதிகபட்சமாக சேலம் மாவட்டத்தில் 17,032 (7.38%) மாணவர்கள் பயனடைந்துள்ளனர். நாமக்கல் 13,312 (5.77%) தர்மபுரி 11,915 (5.16%); சென்னை 11,468 (4.97%); திருவண்ணாமலை 11,146 (4.83%); மற்றும் கோயம்புத்தூர் 10,777 (4.67%) என பயன டைந்துள்ளனர்.
மிகவும் பிற்படுத்தப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் அதிகபட்சமாக 84,806 (36.7%) பயனாளிகளாக உள்ளனர். அதைத் தொடர்ந்து பிற்படுத்தப்பட்ட குடும்பங்களில் உள்ளவர்கள் 70,598 (30.6%); ஆதிதிராவிடர் குடும்பங்கள் 70,546 (30.6%); பழங்குடியினர் 3,025 (1.3%); மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட 1,642 (0.7%). 170 (0.1%) மாணவர்களுக்கு சமூகவகை வெளியிடப்படவில்லை. தேசியநிறுவன தரவரிசை கட்டமைப்பு (NIRF) தர வரிசையில் உள்ள நிறுவனங்களிலும் சுமார் 7,110 பயனாளிகள் பயின்றுவருவதாக மதிப்பீட்டுத் தரவு காட்டுகிறது.
கணக்கெடுப்பில் பதிலளித்தவர்களில் கணிசமான பங்கு ஈரோடு, திருவள்ளூர், தென்காசி, விழுப்புரம் மற்றும் சிவகங்கை போன்ற மாவட்டங்களில் உள்ள கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்களாகும். கணக்கெடுக்கப்பட்ட சில மாவட்டங்களில் ஒப்பீட்டளவில் அதிக இளவயது காப்பகங்கள் ஏற்படு வதால், திருமண வயதை அதிகரிப்பதில் இந்தத் திட்டம் ஒரு பங்கைக் கொண்டிருக்கக்கூடும் என்று மாநில திட்டக் குழு தெரிவித்துள்ளது.
இந்த உதவியை மாணவர்கள் எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்பதையும் அது ஆய்வு செய்துள்ளது, மேலும் பயனாளிகள் முதன்மையாக கல்லூரி மற்றும் போக்குவரத்து செலவுகளை ஈடுகட்ட இதைப் பயன்படுத்துகின்றனர். பல சந்தர்ப்பங்களில், வேலைச் சந்தையில் தேவைப்படும் திறன்களைப் பெறுவதற்கு உதவக்கூடிய கட்டணப் படிப்புகளில் பெண்கள் சேர்ந்துள்ளனர்.நகர்ப்புறங்களில் உள்ள பெண்களை விட கிராமப்புற பெண்களே இத்திட்டத்தின் மூலம் அதிகம் பயனடைந்துள்ளனர்.
மதிப்பீட்டின் ஒரு பகுதியாக இருந்த கிட்டத்தட்ட 150 மாணவர்கள், ஒற்றைப் பெற்றோர் அல்லது பெற்றோர் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இந்த மதிப்பீடு குறித்த முழு அளவிலான அறிக்கையை மாநில திட்டக் குழு விரைவில் தயாரித்து, அது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் ஒப்படைக்கப்படும்.
இவ்வாறு ‘தி இந்து’ ஆங்கில நாளேட்டில் செய்திக் கட்டுரை வெளியாகி உள்ளது.