தமிழ்நாடு அரசின் அழுத்தத்தை அடுத்து, கோதுமை ஒதுக்கீட்டை 8,500 டன்னில் இருந்து 17,000 டன்னாக ஒன்றிய அரசு அதிகரித்துள்ளது. இதனால் ரேசன் கடைகளில் இதுவரை கோதுமைக்கு நிலவிய தட்டுப்பாடு நீங்கியுள்ளது. இதையடுத்து, ரேசன் அட்டைதாரர்கள் அரிசிக்கு பதில் கோதுமையை இலவசமாக பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் மாவட்ட தலைநகரங்களில் 5 கிலோவும், மற்ற இடங்களில் 2 கிலோவும் கோதுமை வழங்கப்படுகிறது.