செய்தியும், சிந்தனையும்…!

1 Min Read
மாற்றம் என்பதுதான் மாறாதது!
* குழந்தைகளுக்குத் தமிழில் பெயர் வையுங்கள் என தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார். அவரது தாத்தா பெயர், தந்தை பெயர், அவரது பெயர் எல்லாம் தமிழ்ப் பெயரா? இப்படி பெயர்களை வைத்துக்கொண்டு, ஒரு வேண்டுகோள் வைக்கலாமா?
– ஒரு சங்கி
* குழந்தைகளுக்குத் தமிழில் பெயர் வையுங்கள் என்ற கருத்தை இந்த சங்கிக் கூட்டம் வரவேற்கிறதா? எதிர்க்கிறதா? என்பதற்குப் பதில் சொல்லட்டும்.
இதற்கெல்லாம் பதில் சொன்னால், இவர்களின் வண்டவாளம் தண்டவாளத்தில் ஏறிவிடுமே!
உபந்நியாசம், அக்கிராசனபதி, வந்தனோபசாரம், நமஸ்காரம் என்றெல்லாம் இக்காலத்தில் சொல்லும் துணிவு இக்கூட்டத்திற்கு உண்டா?
மாற்றம் என்பதுதான் மாறாதது, நினைவிருக்கட்டும்!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *