சென்னை தீவுத்திடலில் ரூபாய் 145 கோடி செலவில் உருவாகிறது கண்காட்சி அரங்கம்

Viduthalai
1 Min Read

சென்னை, நவ.17- சென்னை தீவுத் திடலில் ரூ.145 கோடி செலவில் கண் காட்சி அரங்கம் கட்டப்படுகிறது. ஓராண்டில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் (சி. எம்.டி.ஏ.) சார்பில் சென்னை நகரில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த திட்டங்களை செயல்படுத்து வதில் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு முனைப்பு காட்டி வருகிறார். தொடர்ந்து இதற்காக அவர் பல்வேறு ஆய்வு கூட்டங்களை நடத்தி பணிகளை உரிய காலத்தில் முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

அந்த அடிப்படையில் தீவுத்திடல் கண்காட்சி அரங்கம் அமைக்கும் பணி தற்போது தொடங்க உள்ளது. அதற்கான ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது.
தீவுத்திடலில் பராம்பரிய முறைப் படியான கண்காட்சி அரங்கம் ரூ.145 கோடி செலவில் அமைக்கப்படுகிறது. சுமார் 7 ஏக் கர் பரப்பளவில் இதற்கான பணிகள் நடைபெற உள்ளது. 2 தளங் களுடன் கட்டப்படும் இந்த அரங்கத்தின் ஸ்டிலிட் தளம் திறந்தவெளி பகுதியாக இருக்கும். அங்கு கடைகள், உணவகங்கள் இருக்கும். முதல் மற்றும் 2ஆம் தளத்தில் தலா 20 அரங்கங்கள் அமைக்கப்படுகிறது. தேவைக்கு ஏற்ப இந்த அரங்கத்தை மாற்றி அமைத்துக் கொள்ளலாம். ஒவ்வொரு தளங்களும் சுமார் 50 ஆயிரம் சதுரடியில் கட்டப்படுகிறது. மேலும் கழிப்பறைகள், மின்தூக்கிகள் மற்றும் வாகன நிறுத்து மிடமும் அமைக்கப்படுகிறது. அங்கு ஒரே நேரத்தில் அங்கு தலா 200 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்களை நிறுத்திக் கொள்ளலாம். இதன் கட்டுமான பணிகளை சுமார் 18 மாதங்களில் முடித்து பயன்பாட்டிற்கு கொண் டுவர திட்டமிடப்பட்டுள்ளது. இந்த அரங்கம் பயன்பாட்டிற்கு வந்து விட்டால், அங்கு கண்காட்சிகள் நடத்துவ தற்கு இனி எந்த பிரச்சினையும் இருக்காது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *