இந்தியாவில் கல்வி நிலை இதுதான் 50 விழுக்காடு மாணவர்களுக்கு கல்வி வழங்க 2,500 பல்கலைக்கழகங்கள் தேவை : நிட்டி ஆயோக் தகவல்

Viduthalai
1 Min Read

அய்தராபாத், நவ.17 “இந்தியாவில் 50 சதவீத மாண வர்கள் கல்லூரி படிப்பில் சேர வேண்டுமென்றால் பல்க லைக்கழகங்களின் எண்ணிக்கை இருமடங்கு உயர வேண்டும்” என்று நிட்டி ஆயோக் சிஇஓ சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் பல்கலைக்கழக எண்ணிக்கை, டிஜிட்டல் கட்டமைப்பு குறித்து நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி (சிஇஓ) சுப்ரமணியம் பேசுகையில், “இந்தியாவில் தற்போது 1,200 பல்கலைக்கழகங்கள் உள்ளன. 4 கோடி மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த எண் ணிக்கை கல்லூரி படிக்கும் வயதினரில் 29 சதவீதம் மட்டுமே. 50 சதவீத பேர் கல்லூரி படிப்பில் இணைய வேண்டுமென்றால், நாட்டின் பல்கலைக்கழக எண்ணிக்கை 2,500 ஆக உயர வேண்டும்.

120 கோடி பேருக்கு
வங்கி கணக்கு
டிஜிட்டல் கட்டமைப்பில் இந்தியா முன்னுதாரண நாடாக உள்ளது. 140 கோடி மக்கள்தொகை கொண்ட நாட்டில், 120 கோடி பேருக்கு வங்கிக் கணக்கு உள்ளது. இந்தியாவின் வலுவான டிஜிட்டல் கட்டமைப்பால் நம்மால் பல்வேறு விடயங்களை பரிசோ தித்துப் பார்க்க முடிகிறது. இந்தியாவின் யுபிஅய் மிக முக்கியமான உருவாக்கம். இன்று உலக அளவில் நிகழும் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளில் 50 சதவீதம் இந்தியாவில் மேற் கொள்ளப்படுகிறது. மாதத்துக்கு 1,000 கோடி பரிவர்த்தனைகள் இங்கு நிகழ்கின்றன.

30 டிரில்லியன் டாலர்
2047-ஆம் ஆண்டில் நாட்டின் பொருளாதாரம் 30 டிரில்லியன் டாலராக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நவீன வளர்ந்த நாடாக மாற ஆய்வும் புதிய கண்டு பிடிப்புகளும் மிக முக்கியம் ஆகும். ஏஅய் மற்றும் செமி கண்டக்டர் சார்ந்து ஒன்றிய அரசின் முன்னெடுப்பு, நாட் டின் வளர்ச்சியை மேம்படுத்தும்” என்று தெரிவித்தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *