இங்கே மதவாதப் பரப்புரை செல்லாது பா.ஜ.க.விற்கு சரத்பவார் எச்சரிக்கை

1 Min Read

மும்பை, நவ.17 மகாராஷ்டிர சட்டப்பேரவை தேர்தலையொட்டி துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் 15.11.2024 அன்று புனே நகரில் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர், மகாயுதி அரசுக்கு எதிராக வாக்கு ஜிகாத் மேற்கொள்ளும்படி முஸ்லிம்களை இஸ்லாமிய அறிஞர் ஒருவர் கேட்டுக்கொள்ளும் காட்சிப் பதிவை வெளியிட்டார். மேலும் இதற்கு பதிலடியாக வாக்குகளுக்கான தர்மயுத்தத்தை நாம் தொடங்குவோம் என அழைப்பு விடுத்தார்.

இதுகுறித்து தேசியவாத காங்கிரஸ் (சரத் சந்திர பவார் பிரிவு) தலைவர் சரத் பவார் நேற்று (16.11.2024) புனே நகரில் கூறுகையில் “துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸும் அவரது பாஜக சகாக்களும் ‘வாக்கு ஜிஹாத்’ என்ற பிரச்சாரத்தின் மூலம் வரவிருக்கும் தேர்தலுக்கு மதச் சாயம் பூச முயற்சிக்கின்றனர். ஆனால் நாங்கள் இதற்கு முற்றிலும் எதிரானவர்கள்” என்றார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *