உயிருள்ள பாம்புகள், சுடுகாட்டில் முழுமையாக எரியாமல் இருக்கும் உடலில் இருந்து வெட்டி எடுக்கப்பட்ட மண்டை ஓடு, பிணத்தின் கை, கால் பாகங்களோடு தடை செய்யப்பட்ட வனவிலங்குகளின் தோலை உரித்து அதை உடையாக அணிந்துகொண்டு திரிவது எல்லாம் வட இந்தியாவில் சாதாரணமாகிவிட்டது.எந்த அளவிற்குக் கோரமாக தெரிவார்களோ அந்த அளவிற்கு அவருக்கு மரியாதை உண்டாம்!
சில மாதங்களுக்கு முன்பு வாரணாசி அஸ்ஸிகாட் பகுதியில் வெந்துபோன மனித உடலின் தொடைப்பகுதியை சுவைத்துக் கொண்டே பொதுமக்களுக்கு ஆசிவழங்கிய காணொலிகள் வெளிவந்து குமட்டலை ஏற்படுத்தின.
பிணங்களின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட மண்டை ஓட்டை உடலில் சுற்றிக்கொண்டு, பிணத்தின் கைகளை எடுத்துக்கொண்டு உத்தரப்பிரதேச வீதிகளில் வலம் வருவது தற்போது சர்வசாதாரணம்!
வட நாட்டில் அகோரிகள் என்பவர்கள் சுடுகாட்டில் வாழக் கூடியவர்கள்தானே!
சுடுகாட்டுச் சாம்பலை உடல் முழுவதும் பூசிக் கொள்பவர்கள்தானே!
மனித எலும்புகளை மாலையாகச் சூட்டிக் கொள்பவர்கள்தானே!
மனித மாமிசத்தைச் சாப்பிடக் கூடியவர்கள்தானே!
கொஞ்சம் தமிழ்நாட்டையும், வடநாட்டையும் குறிப்பாக உத்தரப்பிரதேசத்தையும் ஒப்பிட்டுப் பாருங்கள்!
தமிழ்நாட்டில் ஜைன சாமியார் நிர்வாணமாக வந்தாலும் மக்கள் அனுமதிப்பதில்லை.
தந்தை பெரியார், அவர் கண்ட சுயமரியாதை இயக்கத்தின் உழைப்பால் ஏற்பட்ட உணர்வுதானே இதற்குக் காரணம்!
– மயிலாடன்