திருச்சி, நவ.16- திருச்சி மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டம் கடந்த 12.11.2024 அன்று மாலை 6.30 மணி அளவில் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகை அன்னை மணியம்மையார் நூற்றாண்டு அரங்கத்தில் நடைபெற்றது
திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பா ளர் இரா.ஜெயக்குமார் தலைமை ஏற்று ஈரோடு மாநாடு குறித்தும், தமிழர் தலைவர் ஆசிரியர் பிறந்தநாள் விழா குறித்தும், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் அளப்பரிய பணிகள் குறித்தும் எடுத்துரைத்தார். திருச்சி மாவட்டத்தில் கழகப் பிரச்சாரப் பணிகளை தொய்வின்றி தொடர்ந்து நடந்திட மாதம் ஒரு பிரச்சாரக் கூட்டத்தை நடத்திட வேண்டும் என வலியுறுத்தி உரையாற்றினார்.
தொடர்ந்து பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் மதிவாணன், பகுத்தறி வாளர் கழக மாவட்ட செயலாளர் மலர்மன்னன், ‘பெல்’ ஆறுமுகம், காட்டூர் கிளைக் கழகத் தலைவர் சங்கிலிமுத்து, பல்கலைக்கழக திராவிட மாணவர் கழக மாநில அமைப்பாளர் அறிவுச்சுடர், திருச்சி மாநகர செயலாளர் செல்வராசு, மாவட்ட மகளிரணி செயலாளர் சாந்தி, மாவட்ட மகளிரணி தலைவர் ரெஜினா பால்ராஜ், மாநகர பகுத்தறிவாளர் கழகத் தலைவர் குப்துதீன், மாநகர பகுத்தறிவாளர் கழக செயலாளர் பென்னி, விடுதலை செல்வம், துவாக்குடி விடுதலை கிருஷ்ணன், வாழவந்தான்கோட்டை விஜயராகவன், திருவரங்கம் நகர செயலாளர் முருகன், கலைஞர் நகர் தமிழரசன்,திருச்சி மணியன், காட்டூர் கனகராஜ், அறிவுச்செல்வன், மாவட்ட செயலாளர் இரா.மோகன் மாவட்ட தலைவர் ஞா.ஆரோக்கியராஜ் ஆகியோர் கருத்துரை ஆற்றினர். தொடக்கத்தில் மாவட்ட இளைஞரணி செயலாளர் மகாமணி அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்
மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராஜசேகர் நன்றியுரை உரையாற்றினார்.
கூட்டத்தில், நவம்பர் 26 ஈரோட்டில் நடைபெறும் ‘குடிஅரசு’ இதழ் நூற்றாண்டு, சுயமரியாைத இயக்க நூற்றாண்டு மாநாட்டில் திருச்சி கழக மாவட்டத்தில் இருந்து தனி வாகனத்தில் குடும்பத்துடன் பெருந்திரளாபை் பங்கேற்று சிறப்பிப்பது எனவும்,
டிசம்பர் 2 தமிழர் தலைவர் ஆசிரியர் பிறந்தநாள் விழாவில் (சுயமரியாதை நாள்) சென்னையில் திருச்சி கழக மாவட்டத்தி லிருந்து பெருந்திரளாகப் பங்கேற்று தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து ‘விடுதலை’ சந்தா மற்றும் பெரியார் உலக நிதியை வழங்கி பிறந்தநாள் வாழ்த்து தெரிவிப்பது எனவும்,
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 92 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி கழக மாவட்டத்தில் பிரச்சாரக் கூட்டங்களை நடத்துவது மரக்கன்று நடுதல் குருதிக்கொடை வழங்குதல் உள்ளிட்ட நிகழ்வுகளை நடத்தி மகிழ்வது எனவும்,
டிசம்பர் 24 அறிவுலக ஆசான் தலை வர் தந்தை பெரியார் அவர்களின் நினைவு நாளன்று தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவிப்பது, அமைதி ஊர்வலம் நடத்துவது, கழகக் கொடி ஏற்றுவது உள்ளிட்ட நிகழ்வுகளை திருச்சி மாவட்டத்தில் மிகச் சிறப்பாக நடத்துவது எனவும்,
டிசம்பர் 28,29 ஆகிய நாள்களில் திருச்சியில் நடைபெறும் உலக நாத்திகர் மாநாட்டில் மாவட்டத்தில் உள்ள அனைத்து தோழர்களும் பெருந்திரளாகப் பங்கேற்று சிறப்பிப்பதுடன், முழு ஒத்து ழைப்பு வழங்குவது எனவும்,
2024 டிசம்பர் மாதம் முதல் திருச்சி கழக மாவட்டத்தில் மாதம் ஒரு பிரச்சாரக் கூட்டங்களை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது கழகப் பொறுப்பாளர்கள், தோழர்கள் முழு ஒத்துழைப்பு வழங்குவது எனவும் முடிவு செய்யப்பட்டது.