வாழ்க்கை துணை நல ஒப்பந்த மணவிழா வரவேற்பு நிகழ்வு

Viduthalai
1 Min Read

14.11.2024 அன்று மதியம் சிவகங்கை மாவட்ட திராவிடர் கழகத் துணைத் தலைவர் திருக்கோட்டியூர் ஜெ. தனபாலன் த. சிவகாமி ஆகியோரின் மகன் த.பிரபாகரன் – க. சுபாஷிணி இவர்களின் வாழ்க்கை துணை நல ஒப்பந்த மணவிழாவின் வரவேற்பு நிகழ்வு ஆன்றோர், சான்றோர் முன்னிலையில் திருக்கோட்டி யூரில் மிக சிறப்பாக நடைபெற்றது. வரவேற்பு நிகழ்விற்கு சிவகங்கை மாவட்ட திராவிடர் கழகக் காப்பாளர் வழக்குரைஞர். ச.இன்பலாதன் அவர்களும், மரு. இ. மலர்க்கண்ணி அவர்களும், மரு. இ. இராசராசன் அவர்களும், சிவகங்கை மாவட்ட கழகத் தலைவர், இரா.புகழேந்தி, மாவட்டச் செயலாளர் பெரு.இராசாராம், வட சென்னை கழக மாவட்டச் செயலாளர் அன்புச் செல்வன், மதிவாணன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப் பித்தனர். மண மக்களுக்கு தந்தை பெரியார் அவர்களின் புத்தகம் பரிசாக அளித்து வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. மணவிழாவின் முக்கிய அம்சமாக, சிவகங்கை மாவட்ட கழகத் துணைத் தலைவர் ஜெ. தனபாலன், மண விழாவிற்கு வருகை புரிந்த விருந்தினர்கள் அனைவருக்கும் தந்தை பெரியார் அவர்களின் “பெண் ஏன் அடிமையானாள்” என்ற புத்தகத்தை அன்பளிப்பாக அளித்தார். அனைவரும் அப்புத்தகத்தை மகிழ்வுடன் பெற்றுக் கொண்டு, இது ஒரு வித்தியாசமான முன்னெடுப்பு என்று பாராட்டிச் சென்றனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *