14.11.2024 அன்று மதியம் சிவகங்கை மாவட்ட திராவிடர் கழகத் துணைத் தலைவர் திருக்கோட்டியூர் ஜெ. தனபாலன் த. சிவகாமி ஆகியோரின் மகன் த.பிரபாகரன் – க. சுபாஷிணி இவர்களின் வாழ்க்கை துணை நல ஒப்பந்த மணவிழாவின் வரவேற்பு நிகழ்வு ஆன்றோர், சான்றோர் முன்னிலையில் திருக்கோட்டி யூரில் மிக சிறப்பாக நடைபெற்றது. வரவேற்பு நிகழ்விற்கு சிவகங்கை மாவட்ட திராவிடர் கழகக் காப்பாளர் வழக்குரைஞர். ச.இன்பலாதன் அவர்களும், மரு. இ. மலர்க்கண்ணி அவர்களும், மரு. இ. இராசராசன் அவர்களும், சிவகங்கை மாவட்ட கழகத் தலைவர், இரா.புகழேந்தி, மாவட்டச் செயலாளர் பெரு.இராசாராம், வட சென்னை கழக மாவட்டச் செயலாளர் அன்புச் செல்வன், மதிவாணன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப் பித்தனர். மண மக்களுக்கு தந்தை பெரியார் அவர்களின் புத்தகம் பரிசாக அளித்து வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. மணவிழாவின் முக்கிய அம்சமாக, சிவகங்கை மாவட்ட கழகத் துணைத் தலைவர் ஜெ. தனபாலன், மண விழாவிற்கு வருகை புரிந்த விருந்தினர்கள் அனைவருக்கும் தந்தை பெரியார் அவர்களின் “பெண் ஏன் அடிமையானாள்” என்ற புத்தகத்தை அன்பளிப்பாக அளித்தார். அனைவரும் அப்புத்தகத்தை மகிழ்வுடன் பெற்றுக் கொண்டு, இது ஒரு வித்தியாசமான முன்னெடுப்பு என்று பாராட்டிச் சென்றனர்.
வாழ்க்கை துணை நல ஒப்பந்த மணவிழா வரவேற்பு நிகழ்வு
1 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
TAGGED:மணவிழா
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
