நமது கனவுகளை குழந்தைகள்மீது ஏற்ற வேண்டாம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

viduthalai
1 Min Read

சென்னை, நவ.15 நமது கனவுகளை குழந்தைகளின் மீது ஏற்ற வேண்டாம் என்று பெற்றோர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.
குழந்தைகள் நாளையொட்டி, எக்ஸ் தளத்தில் அவர் நேற்று (14.11.2024) வெளியிட்ட பதிவு:
மழலை மாறாத சிரிப்புடன், கற்பிதங்கள் இல்லாத உள்ளத்துடன் உலகையும் சக மனிதா்களையும் எதிர்கொள்ளும் குழந்தைகளுக்கு முன்மாதிரியாக நம்மை வடிவமைத்துக் கொள்வது ஒவ்வொரு பொறுப்புள்ள மனிதரின் கடமை.
நமது கனவுகளை குழந்தைகளின் மேல் ஏற்றக் கூடாது. அவா்களது கனவுகள் ஈடேறத் துணை நிற்போம். வளமான, நலமான, பசுமையான சூழல் கொண்ட உலகில் குழந்தைகளை வளா்ப்போம் என்ற உறுதியே குழந்தைகள் தின வாழ்த்தாகத் தெரிவிப்போம். நமது உலகையும் வாழ்வையும் ஒளிபெறச் செய்யும் குழந்தைகளுக்கு எனது அன்பும் வாழ்த்துகளும் என்று தெரிவித்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *