பெரியார் விடுக்கும் வினா! (1489)

1 Min Read

ஒரு பெண்கள் மாநாடு நடத்துகிறார்கள். அந்த மாநாட்டில் உள்ள பெண்கள் அத்தனை பேரும் பதிவிரதைகளாக நடந்து கொள்ள வேண்டும் என்று தீர்மானித்து விட்டுப் பதிவிரதை என்றால் “எல்லா ஆண்களையும் தங்கள் கணவனைப் போல் கருதி நடந்து கொள்ள வேண்டும். அதுதான் பதிவிரதைத் தன்மை” என்று அர்த்தம் சொல்வது எவ்வளவு அயோக்கியத்தனமோ அதைவிட அயோக்கியத்தனம் மதச்சார்பற்ற (செக்குலர்) என்பதற்கு எல்லா மதங்களையும் ஒன்றுபோல் கருதிப் பேண வேண்டும் என்பதும் – ஆகவே “மதச்சார்பற்ற” என்ற சொல்லுக்கு உரியபடி அரசாங்கம் நடத்துவோர் நடந்து கொள்ள வேண்டாமா?

– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *