காஞ்சிபுரம், நவ. 15- காஞ்சிபுரம் மாவட்டம். தாமல், அண்ணா சிலை அருகில், 4.11.2024 திங்கட்கிழமை மாலை 6 மணியளவில், திராவிடர் கழகத்தின் சார்பில் ஈரோட்டில் நவம்பர் 26 இல் நடைபெறவுள்ள சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா மாநாட்டு விளக்கப் பொதுக் கூட்டம் நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாவட்ட கழகத் தலைவர் அ.வெ. முரளி அனைவரையும் வரவேற்று, பொதுக் கூட்டத்தின் நோக்கம் குறித்து உரையாற்றி, கூட்டத்தை ஒருங்கிணைத்து நடத்தினார். மாவட்ட கழகச் செயலாளர் கி. இளையவேள் தலைமை தாங்கினார்.
காஞ்சிபுரம் ஒன்றிய திமுக துணைச் செயலாளர் இரா. இளஞ் செழியன், மோகனா இளஞ்செழியன், பகுத்தறிவாளர் கழக மாவட்டச் செயலாளர் பா. இளம்பரிதி மற்றும் திமுக பொறுப்பாளர்கள் முன்னிலை வகித்தனர்.
எழுச்சிப் பாடகர் காஞ்சி உலக ஒளி பெரியாரைப் பற்றி பாடலைப் பாடி பொதுக் கூட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
தோழர் இரவிபாரதி, திமுக சொற்பொழிவாளர் விஷார் தமிழரசன், தோழர் பெ.பழனி, தோழர் காஞ்சி அமுதன், தலைமை கழக அமைப்பாளர் அரக்கோணம் பு. எல்லப்பன், மாவட்ட காப்பாளர் டி.ஏ.ஜி. அசோகன் ஆகியோர் உரை யாற்றினர்.
திமுக சொற்பொழிவாளர் நாத்திகம் நாகராசன் நகைச்சுவையாக பல செய்திகளை எடுத்துக் காட்டி சிறப்புரையாற்றினார்.
பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் முனைவர் காஞ்சி பா. கதிரவன் நிறைவுரையாற்றினர்.
அவர் தம் உரையில், சுயமரி யாதை இயக்கத்தின் தோற்றம் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி, திராவிட மாடல் முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின், திராவிட இயக்கக் கொள்கைகளை அடுத்தத் தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முதலியோரின் செயல்பாடுகள் குறித்தும், சுயமரி யாதை இயக்கத்தின் வளர்ச்சி, சாதனைகள் குறித்தும், பெரியார் உலகம் குறித்தும் எடுத்துக் கூறி, நவம்பர் 26 ஈரோடு மாநாட் டில் கட்சிகளைக் கடந்து அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து உரையாற்றினார். மாவட்ட கழக இளைஞரணி அமைப்பாளர் வீ. கோவிந்தராஜ் நன்றி கூறினார்.
ஒன்றிய கழக அமைப்பாளர் எஸ். செல்வம், ஓய்வு பெற்ற வட்டாட்சியர் போளூர் பன்னீர்செல்வம், கழகத் தோழர் இ. இரவிந்திரன், திமுக சொற்பொழிவாளர்கள் தாவீது, சன். சங்கர், தோழர் அருண்குமார் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் கலந்துக் கொண்டனர்.
இக்கூட்டம் தாமல் கிராமத்தில் மிக பெரிய அளவிலான எழுச்சியையும் புத்துணர்வையும் ஏற்படுத்தியது.