டிசம்பர் 28, 29 இந்திய பகுத்தறிவாளர்கள் மாநாட்டிற்கு புதிய உறுப்பினர்களுடன் அணி வகுத்தல்..! விருதாச்சலம் மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டத்தில் தீர்மானம்

viduthalai
2 Min Read

விருத்தாச்சலம், நவ. 15- பெண்ணாடம் பெரியார் படிப்பகத்தில் 10.11.2024 அன்று விருதாச்சலம் மாவட்ட பகுத் தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. கூட்டத்திற்கு பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் இரா,பெரியார் செல்வம் நோக்கவுரை ஆற்றினார். பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் க.ராஜா வரவேற்புரை ஆற்றினார்.

நிகழ்ச்சியின் தொடக்கமாக பகுத்தறிவாளர் கழக மாநில பொதுச் செயலாளர் வா.தமிழ் பிரபாகரன் திருச்சியில் நடைபெற இருக்கும் “இந்திய பகுத்தறிவாளர்கள் கூட்டமைப்பு சங்கங்களின்” மாநில மாநாடு இம்முறை தமிழ்நாட்டில் நடத்துவதற்கான நோக்கம் என்ன என்பதை,விரிவாக எடுத்துக் கூறினார்.

இரண்டு நாட்கள் நடைபெறும் இம்மாநாட்டில் இடம்பெறும் நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள், ஒளிப்படக் கண்காட்சிகள், பெரியார் உலகம் பார்வையிடல், இரண்டு நாட்களுக்கான உணவு, தோழர்கள் தங்குவதற்கான இட வசதி, அதற்கான மிகப்பெரும் பொருட்செலவு,அதனை ஈடு செய்யும் வகையில் தோழர்கள் பெருவாரியாக நன்கொடை வசூல் செய்து தருவது அவசியம் என்பதை எடுத்துக் கூறினார்.

திராவிடர் கழக பொதுச் செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன் பகுத்தறிவாளர் கழகம் தொடங்கப்பட்டதின் நோக்கம், அதன் செயல்பாடுகள் ஆகியன குறித்து கருத்துரை வழங்கினார். அதில் புதிதாக பகுத்தறிவாளர் கழகத்தில் இணைந்த தோழர்களை பாராட்டி அவர்கள் பகுத்தறிவாளர் கழகத்தை நோக்கி வருவதால் அவர் கள் வாழ்வில் ஏற்படும் உயர்வுகள் பற்றி விளக்கி கூறினார்.

மாநில அமைப்பாளர் இரா.பெரியார் செல்வம் பேசுகையில் விருதாச்சலம் பகுதியில் உள்ள ஆசிரியர்கள் பெரியாரிய உணர்வாளர்கள், முக்கிய பிரமுகர்களை நேரில் சந்தித்து மாநாட்டிற்கான நிதியை வசூல் செய்வதோடு பெருவாரியான தோழர்களை மாநாட்டில் பங்கு பெற வைக்க முயற்சியை மேற்கொள்வதாக கூறினார். கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்ட தோழர்கள் அனைவரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு நன்கொடைகளை அளித்தனர்.

கலந்துரையாடல் கூட்டத்தில் அ.இளங்கோவன் மாவட்ட தலைவர் ப.வெற்றிச்செல்வன் மாவட்ட செயலாளர் த.சீ.இளந்திரையன் தலைமை கழக அமைப்பாளர் வை.இளவரசன் கழக காப்பாளர் வெ.அறிவு திட்டக்குடி நகர தலைவர் தங்க.ராசமாணிக்கம் பொதுக்குழு உறுப்பினர் பெண்ணாடம் சுப்பிரமணியன் நல்லூர் ஒன்றிய தலைவர், அ.பழநியாண்டி வழக்குரைஞர் அணி ரா.பிருத்திவிராஜ் திராவிடர் கழக இளைஞரணி, வடலூர் நகர தோழர் இந்திரஜித் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மாநாட்டிற்கு நன்கொடை அளித்த தோழர்கள் விவரம்
1. ஜெயசங்கர் ப.க மாவட்ட தலைவர்: 5000
2. ராஜா ப.க மாவட்ட செயலாளர்: 3000
3. இளங்கோ மாவட்ட தலைவர்: 1000
4. இளவரசன்: 1000
மொத்தம்: 10,000

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *